ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு – விஜய் ஆண்டனியின் மாஸ்டர் ப்ளான்!
இப்போது இண்டஸ்ட்ரியில் சிவகார்த்திகேயனுக்கே டஃப் ஃபைட் கொடுப்பது விஜய் ஆண்டனி தான். மினிமம் கேரண்டி என்றிருந்த விஜய் ஆண்டனியின் மார்க்கெட்டை ப்ளாக்பஸ்டர் லெவலுக்கு மாற்றிவிட்டது பிச்சைக்காரன்.

இங்கே கலெக்ஷனில் பெரிய ஹீரோக்கள் படங்களுக்கு இணையாக எகிறியது மட்டுமல்லாமல் தெலுங்கிலும் சுமார் இருபது கோடியைத் தாண்டி அள்ளியது. அடுத்து கன்னடத்திலும் நல்ல கலெஷனை தந்திருப்பதால் இப்போது விஜய் ஆண்டனி ஒரு புதிய முடிவுக்கு வந்திருக்கிறார்.
தமிழில் ரிலீஸாகி சில வாரங்கள் கழித்து தெலுங்கில் வெளியானபோதே இவ்வளவு வசூலைப் பார்த்ததால் இனிமேல் ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு, கன்னடம் என மூன்று மொழிகளில் ரிலீஸ் பண்ணவிருக்கிறார். சைத்தான் படத்தில் இருந்து இந்த ஃபார்முலாவில் ரிலீஸ் ஆகலாம்!


Click it and Unblock the Notifications











