Don't Miss!
- Sports ஐபிஎல்- சாதனை பட்டியலில் ருதுராஜ்.. ஒவ்வொரு அணி கேப்டனும் அடிச்ச அதிகபட்ச ஸ்கோர் எவ்வளவு தெரியுமா?
- Finance தண்ணீர் பஞ்சத்தை விடுங்க.. Apple கடை வருதாம்ல்ல.. க்யூகட்டி நிக்க வேண்டியது தான்..!!
- Technology கம்பெனிக்கு கட்டுமா பாஸ்.. ரூ.10,999 போதும்.. 108MP கேமரா.. 8GB ரேம்.. புதிய itel போன் அறிமுகம்.. எந்த மாடல்?
- Automobiles 21 வயசு பொண்ணுக்கு இப்படி ஒரு காரானு எல்லாரையும் புலம்ப வச்சுட்டாரு அவரோட அப்பா! பலரோட கனவு காருங்க இது!
- Lifestyle Today Rasi Palan 24 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் பிறர் பிரச்சனைகளில் தலையிடாமல் இருந்தால் நல்லது...
- News நேரு பேரனா ராகுல் காந்தி? எனக்கு சந்தேகம் இருக்கு.. டிஎன்ஏ டெஸ்ட் செய்யணும்.. கேரள எம்எல்ஏ சர்ச்சை
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
ரூ. 250க்கும், செல்போனுக்கும் கொலை செய்யப்பட்ட விஜய் ரசிகர்
காஞ்சிபுரம்: ரூ. 250க்கும், செல்போனுக்கும் ஆசைப்பட்டு விஜய் மக்கள் இயக்கத்தின் காஞ்சிபுரம் மாவட்ட தலைவர் இமயம் ரவி கொலை செய்யப்பட்டது தெரிய வந்துள்ளது.
விஜய் மக்கள் இயக்கத்தின் காஞ்சிபுரம் மாவட்ட தலைவராக இருந்தவர் இமயம் ரவி(48). ஓவியர். விஜய்யின் பைரவா படம் கடந்த 12ம் தேதி ரிலீஸானது. அதற்கு முந்தைய நாள் அதாவது கடந்த 11ம் தேதி அவர் பட ரிலீஸுக்கான ஏற்பாடுகளை கண்காணிக்க வெளியே சென்றுள்ளார்.
பட ஏற்பாடுகளை பார்க்கச் சென்றவர் வீடு திரும்பவில்லை. இதையடுத்து பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை. இந்நிலையில் அவர் பிணமாகக் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் வழிப்பறி கும்பல் ஒன்று ரவியிடம் இருந்த ரூ.250 மற்றும் செல்போனை பறிக்க முயன்றுள்ளது. அவர் போராட அப்போது அந்த கும்பல் அவரை கொலை செய்துவிட்டு தப்பியோடியது தெரிய வந்துள்ளது. இந்த வழக்கு தொடர்பாக போலீசார் 3 பேரை கைது செய்துள்ளனர்.
ரவியின் உடலுக்கு நடிகர் விஜய் நேரில் அஞ்சலி செலுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.