Don't Miss!
- Finance சென்னை-க்கு ஓடி வந்த அம்பானி..! புதிய பிஸ்னஸ், சியோமி உடன் போட்டியா..?
- News மதம் Vs மக்கள் திட்டங்கள்: பாஜகவின் கடலோர கர்நாடகா கோட்டையின் 3 தொகுதிகளை வேட்டையாடுமா காங்கிரஸ்?
- Lifestyle கத்திரிக்காயை இந்த மாதிரி ஒருமுறை பொரியல் செய்யுங்க.. பிடிக்காதவங்களும் கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க...
- Technology அள்ளி தரும் BSNL.. வெறும் ரூ.299 போதும்.. தினமும் 3GB டேட்டா.. வாய்ஸ் கால்கள்.. எத்தனை நாள் வேலிடிட்டி?
- Automobiles சாதாரணமா பஸ்ஸில் பயணம் செய்தது இவ்ளோ பெரிய ஆளா... முகத்தை நல்லா உத்து பார்த்ததும் ஷாக் ஆன மக்கள்...
- Sports IPL 2024: வெட்கத்தை விட்டு சொல்றேன்.. சிஎஸ்கே அணியால் இதை கூட செய்ய முடியலை.. புலம்பிய பிளெம்மிங்
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
விஜய்யின் திடீர் கோபம்… இயக்குநர் மீது கடும் அதிருப்தி… சீக்கிரம் முடியுமா வாரிசு ஷூட்டிங்?
சென்னை: விஜய் நடித்து வரும் வாரிசு திரைப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது.
வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் உருவாகும் வாரிசு திரைப்படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் வெளியாகிறது.
வாரிசு திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகவுள்ள நிலையில், இயக்குநர் மீது விஜய் கோபத்தில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
வாரிசு நடிகை ராஷ்மிகாவுக்கு என்ன ஆச்சு? மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற புகைப்படம் வெளியானது
இறுதிக்கட்டத்தில் வாரிசு
வம்ஷி பைடிபள்ளி இயக்கும் வாரிசு படத்தில் பிஸியாக நடித்து வருகிறார் விஜய். ஒருநேரத்தில் ஒரு படத்தில் மட்டும் தான் நடிப்பது என விஜய் ரொம்ப தெளிவாக கால்ஷீட் கொடுத்து கமிட் ஆகி வருகிறார். வாரிசு ஷூட்டிங் முடிந்ததும் விஜய்யின் 'தளபதி 67' பற்றி அதிகாரப்பூர்வமான அப்டேட் வெளியாகும் எனத் தெரிகிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் மீண்டும் நடிக்கவுள்ளது அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், தற்போது உருவாகி வரும் வாரிசு திரைப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது.
தீபாவளிக்கு வாரிசு ஃபர்ஸ்ட் சிங்கிள்
வாரிசு திரைப்படம் 2023 பொங்கலுக்கு வெளியாகும் என படக்குழு ஏற்கனவே அறிவித்துவிட்டது. விஜய்யுடன் ராஷ்மிகா மந்தனா, யோகிபாபு, எஸ்ஜே சூர்யா, சரத்குமார், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட மேலும் பலர் இந்தப் படத்தில் நடித்து வருகின்றனர். இந்நிலையில், வாரிசு ஃபர்ஸ்ட் சிங்கிள் தீபாவளிக்கு வெளியாகும் என சொல்லப்படுகிறது. இதுவரை விஜய்யின் போஸ்டர்களை மட்டுமே படக்குழு வெளியிட்டுள்ள நிலையில், ரசிகர்களை உற்சாகப்படுத்த தீபாவளிக்கு ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இயக்குநர் மீது விஜய்க்கு கோபம்
அஜித்தின் துணிவு பொங்கலுக்கு ரிலீஸாகும் என தகவல் வெளியானது. இதனால் விஜய்யின் வாரிசு ரிலீஸ் தள்ளிப்போகும் என்றும் சொல்லப்பட்டது. ஆனால், வாரிசு படத்தை பொங்கலுக்கு ரிலீஸ் பண்ண படக்குழு தீயாக வேலை பார்த்து வருகின்றனர். சென்னை எண்ணுர் பகுதியில் கடந்த சில தினங்களாக வாரிசு ஷூட்டிங் வேகமாக நடைபெற்று வருகிறது. இதனிடையே வாரிசு இயக்குநர் வம்ஷி பைடிபள்ளி மீது விஜய் கோபத்தில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதுதான் காரணமா
கடந்த வாரம் இயக்குநர் வம்சி உடல்நிலை சரியில்லாமல் அவதிப்பட்டுள்ளார், அதனால் அவரை ஒருவாரம் ஓய்வில் இருக்கும்படி மருத்துவர்கள் அறிவுறுத்தியதாக சொல்லப்படுகிறது. முதலில் விஜய்யிடம் 105 நாட்களில் படத்தை முடிப்பதாக கூறி அவர் கால்ஷீட் வாங்கியுள்ளார். ஆனால் தற்போது மேலும் 40 நாட்கள் கால்ஷீட் வேண்டும் என விஜய்யிடம் கேட்டுள்ளாராம் வம்சி. இதனால் வம்சி மீது நடிகர் விஜய் அதிருப்தியில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனாலும் வாரிசு ஷூட்டிங் விரைவில் முடிந்துவிடும் எனக் கூறப்படுகிறது.
-
நல்ல படம் எடுத்துட்டா போதும்.. அந்த இயக்குநரை பெரிய ஹீரோ காலி பண்ணிடுவாரு.. பிரபல நடிகர் பகீர்!
-
பழனிக்கே பஞ்சாமிர்தமா?.. கூலி படத்தோட கதையில பல வருஷத்துக்கு முன்னாடியே ரஜினி நடிச்சிட்டாரே பாஸ்!
-
Ghilli Box Office: 3 நாளும் வெறித்தனம்.. ரீ ரிலீஸில் மரண மாஸ் காட்டும் கில்லி.. இத்தனை கோடி வசூலா?