Don't Miss!
- News "பேசுவதை எல்லாம் ஒட்டு கேக்குறாங்க.. இதனால நான் செல்போனை யூஸ் பண்றதே இல்லை.." ஹெச்.ராஜா பகீர் புகார்
- Sports 4 பந்துகளில் 4 சிக்ஸ்.. டி வில்லியர்ஸ் சாதனையை முறியடித்த பட்டிதர்.. 19 பந்துகளில் மிரட்டல் அரைசதம்!
- Automobiles டீ கடை பிசினஸை விட்டு தள்ளுங்க.. ரயில்வே ஸ்டேஷன்ல தண்ணி கட போட்டாலே கோடி கணக்குல சம்பாதிக்கலாம்..
- Lifestyle சப்பாத்திக்கு ஏற்ற மணமணக்கும்... ருசியான.. சைவ சிக்கன் கிரேவியை எப்படி செய்யணும் தெரியுமா?
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
விஜய் பட கதை இப்படி கசிந்துவிட்டதே: முருகதாஸ் செம டென்ஷன்
சென்னை: விஜய்யை வைத்து தான் எடுத்து வரும் படத்தின் கதை கசிந்துவிட்டதால் இயக்குனர் முருகதாஸ் அதிர்ச்சி அடைந்துள்ளாராம்.
ஏ.ஆர். முருகதாஸ், விஜய் மீண்டும் சேர்ந்துள்ள படத்தின் படப்பிடிப்பு கடந்த 3ம் தேதி கொல்கத்தாவில் துவங்கியது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக சமந்தா நடிக்கிறார்.
விஜய் இரட்டை வேடத்தில் நடிக்கும் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
கதை கசிவு
முருகதாஸ் சந்தோஷமாக பூஜைபோட்டு படத்தை துவங்கி படப்பிடிப்பை நடத்தி வருகிறார். இந்நிலையில் நேற்று இணையதளங்களில் அவர் படத்தின் கதை கசிந்துவிட்டது.
கதை என்ன?
படத்தில் வில்லன் டோட்டா ராய் சௌத்ரி ஒரு சர்வதேச குற்றவாளியாம். வில்லன் கொல்கத்தாவில் குண்டு வைக்க வரும் தகவல் கிடைத்த போலீஸ் விஜய் உதவியுடன் அவரை கைது செய்து சிறையில் அடைக்கிறது.
இரண்டு விஜய்
சிறையில் இருந்து தப்பிக்கும் வில்லன் தன்னை பிடித்துக் கொடுத்த விஜய்யை பழிவாங்க தேடி சென்னை வருகிறார். வந்த இடத்தில் இரண்டு விஜய் இருப்பதை தெரிந்து கொள்கிறார்.
கிளைமாக்ஸ்
தன்னை பிடித்துக் கொடுத்த விஜய்யை கண்டுபிடித்து அவர் பழிவாங்குகிறாரா? அவரிடம் இருந்து விஜய் எப்படி தப்பிக்கிறார் என்பது தான் கதையாம்.
அதிர்ச்சி
படம் துவங்கிய வேகத்தில் இப்படி கதை இணையதளங்களில் கசிந்துவிட்டதே என்று முருகதாஸ் அதிர்ச்சி அடைந்துள்ளாராம். கதையை யார் கசியவிட்டார்கள் என்று விசாரித்து வருகிறாராம். மேலும் கதையில் சில மாற்றங்கள் செய்ய தீர்மானித்திருக்கிறாராம் முருகதாஸ்.
-
ரஜினிகாந்துக்கு 300 கோடி சம்பளமா?.. பலருக்கு தூக்கமே போயிடுமே பாஸ்.. டைட்டில் மட்டும் தான் ‘கூலி’!
-
பேயாட்டம்!.. கில்லி படத்தை பார்த்துட்டு தியேட்டரில் பெண்கள் பார்த்த வேலை.. பசங்களே மிரண்டுட்டாங்க!
-
சுடர் மீது புகார் கொடுத்த எழில்.. கண்கலங்கிய அஞ்சலி நினைத்தேன் வந்தாய்.. இன்றைய எபிசோட் அப்டேட்!