Don't Miss!
- Sports அடுத்தடுத்த வீழ்ந்த 2 வீரர்கள்.. சிஎஸ்கே பேட்டிங் வரிசையில் நடந்த மாற்றம்.. ஜடேஜா கொடுத்த சர்ப்ரைஸ்!
- News தமிழகத்தில் 72% வாக்குப்பதிவு! 2019இல் தேர்தலில் பதிவான வாக்குகள் எவ்வளவு - தொகுதி வாரியான விவரம்
- Technology ஆத்தாடி.. ஒரே போனை வைத்து.. இந்தியாவில் சம்பவம் செய்ய பார்க்கும் Samsung.. பட்ஜெட்ல அறிமுகமாகும் புது Mobile..
- Finance தூத்துக்குடி நிறுவனத்தை அலேக்கா வாங்கிய அதானி.. மாஸ்டர் பிளான் உடன் களமிறங்கிய கௌதம் அதானி..!!
- Lifestyle நீங்கள் குழந்தைகளுக்கு செர்லாக் உணவளிக்கிறீர்களா? இனி கவனமாக இருங்கள்..!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
- Automobiles ஓட்டு போட வந்த பிரபலங்கள் எந்த கார்களில் வந்தார்கள் தெரியுமா? பாதிபேர் ஒரே மாதிரி கார்ல வந்திருக்காங்க!
அட்லீயுடன் துபாய் சென்ற விஜய்: மெர்சல் 2 டிஸ்கஷனா? #Mersal2
சென்னை: விஜய், இயக்குனர் அட்லீ, ஒளிப்பதிவாளர் விஷ்ணு ஆகியோர் துபாய் சென்றிருக்கிறார்கள்.
அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்த மெர்சல் படம் சூப்பர் ஹிட்டாகியுள்ளது. இதையடுத்து விஜய் படக்குழுவுக்கு சிறப்பு பார்ட்டி கொடுத்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
இந்நிலையில் தான் விஜய் துபாய் சென்றுள்ளார்.
அட்லீ
விஜய் தனியாக துபாய் செல்லவில்லை. அவருடன் அட்லீயும், மெர்சல் படத்தின் ஒளிப்பதிவாளர் விஷ்ணுவும் சென்றுள்ளனர். விஜய் கடற்கரையோரம் நின்று கொண்டிருந்ததை மக்கள் பார்த்துள்ளனர்.
அப்படியா?
மெர்சல் பட வெற்றியை கொண்டாடவே விஜய், அட்லீ, விஷ்ணு துபாய் சென்றார்களாம். ஆனால் மூன்று பேர் மட்டும் சென்றதால் மெர்சல் 2 படத்திற்கான டிஸ்கஷனோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
சினிமா
விஜய்யின் சினிமா வாழ்க்கையில் மெர்சல் தான் மெகா ஹிட் படம் என்கிறார்கள். அதனால் அவர் மீண்டும் அட்லீயுடன் கைகோர்க்கிறாரோ என்ற பேச்சு கிளம்பியுள்ளது.
விருப்பம்
விஜய், அட்லீ வெற்றிக் கூட்டணி மெர்சல் 2 படத்தில் சேர வேண்டும் என்று ரசிகர்கள் விரும்புகிறார்கள். திரும்ப வர்றோம் தெறிக்க விடுறோம் என்று தங்களின் விருப்பத்தை ட்விட்டரில் தெரிவித்துள்ளனர் ரசிகர்கள்.