Don't Miss!
- News அத்தை ராதிகா பாஜக வேட்பாளர்.. திமுகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்யும் எம்.ஆர்.ராதா பேரன் வாசு விக்ரம்
- Lifestyle ஒரு டைம் காளானை வாங்கி இப்படி ட்ரை பண்ணுங்க.. சும்மா அள்ளும்...
- Finance மக்கள் அதிகம் வாங்குவதாலேயே தங்கம் விலை உயர்கிறதா..? உண்மை என்ன..?!
- Automobiles பெட்ரோல் போடுவதை போல ஹைட்ரஜனை நிரப்பிட்டா 3,000 கிமீ நிற்காம போகும்! உலக சாதனை படைத்த ரயில்!
- Sports மும்பை பாணியில் கம்பீர் எடுத்த முடிவு.. 16 வயது சிறுவனை ஒப்பந்தம் செய்த கேகேஆர்.. யாருப்பா அந்த பையன்?
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Technology அம்மா வாங்க.. ஐயா வாங்க! கிட்டத்தட்ட பாதி விலை டிஸ்கவுண்ட்.. Amazon-ல் கூவிக்கூவி விற்கப்படும் ஐந்து 4K TVகள்!
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
திரைத் துளி
விஜயகாந்தை தங்கள் பக்கமாக இழுக்க பாஜக ரகசியமாய் பேச்சு நடத்தி வருவதை நாம் சமீபத்தில் சுட்டிக்காட்டியிருந்தோம்.
இந் நிலையில் இன்று பாஜக மாநிலத் தலைவர் ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் பேசுகையில்,
தமிழக சட்டசபை தேர்தலில் 3வது அணி உருவாகுமா ? அல்லது உருவாக்கப்படுமா ? என்பது தேர்தல் நெருங்கும்போது தான் தெரியும்.
பாரதீய ஜனதாவை தனிமைப்படுத்தும் முயற்சிகள் பலிக்காது. எல்லா கட்சிகளும் தனித்து நின்று போட்டியிட்டால்பாரதிய ஜனதாவும் தனித்து நிற்கும்.
நடிகர் விஜயகாந்த் மக்களுக்கு நல்லது செய்யவேண்டும் என்ற எண்ணம் கொண்டவர். பல நல்ல காரியங்களைஅவர் செய்து வருகிறார். இப்படிப்பட்ட பண்பினைக் கொண்டவர்கள் அரசியலுக்கு கண்டிப்பாக வரவேண்டும்.அவர் அரசியலுக்கு வந்தால் அவரை வரவேற்க பாரதீய ஜனதா கட்சி தயாராக உள்ளது.
சுனாமி நிவாரணப் பணிகளில் முறைகேடுகள் நடந்தால் அது குறித்து அரசு விசாரணை நடத்தவேண்டும். சுனாமிபாதிப்பு ஏற்பட்ட சமயத்தில் கருணாநிதிக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்தது. ஆனால் இப்போது திண்டுக்கல்வரை திமுக மாநாட்டிற்கு போன கருணாநிதி அப்படியே சுனாமி பாதித்த பகுதிகளுக்கும் சென்று வந்திருக்கலாம்.
ஆனால், மரம் வெட்டிய விவகாரத்தில் ஆற்காடு வீராசாமியின் தம்பி மீது குற்றம் சாட்டப்பட்டதற்காக சாலைமறியல் போராட்டத்தில் கலந்து கொள்ள சென்றிருக்கிறார் கருணாநிதி என்றார் ராதாகிருஷ்ணன்.