திரைத் துளி

By Staff

பிரபல நடிகை வினிதா விபச்சார வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.

காரில் உல்லாசமாக இருக்க ரூ.1.5 லட்சம் வரை வாங்கிக் கொண்டு விபச்சாரத்தில் ஈடுபட்ட அவர் தனதுதாயாருடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

சமீப காலமாக அவர் சென்னை பார்ட்டிகளில் நட்சத்திர ஹோட்டல்களிலும் வெவ்வேறு நபர்களுடன் அதிகஅளவில் தென்படுவதையும், கிழடு கட்டை தொழிலதிபர்கள் கூட அவரைக் கூட்டிக் கொண்டு பார்ட்டிகளுக்குவருவதையும் நாம் சில மாதங்களுக்கு முன் தெரிவித்திருந்தோம்.

இந் நிலையில் விபச்சாரம் செய்ததாக அவர் கைது செய்யப்பட்டுளளார்.

தமிழில் நடிகர் அருண்குமாருடன் சேர்ந்து ஊழியன் என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் வினிதா.மலையாளியான இவர் துபாயில் வளர்ந்தவர். பின்னர் விஜய்காந்த், பிரபு, சரத்குமார், ஜெயராம் என பலருடன்நடித்தார்.

சமீபத்தில் காலமாக வாய்ப்புக்கள் இல்லை. இதனால் விபச்சாரத்தில் இறங்கினார். இதற்கிடையே கும்மாளம் என்றபடத்தில் ஒரு பாட்டுக்கு டான்ஸ் ஆடினார். இப்போது யோகா டீச்சர் என்ற படத்தில் செக்சியான ரோவில் நடித்துவருகிறார்.

கோடம்பாக்கத்தில் உள்ள தனது வீட்டிலேயே விபச்சாரத்தில் ஈடுபட்டு வருவதாக அரசல் புரசலாக பேச்சுக்கள்இருந்தன. அதே போல பணத்துக்காக தொழிலதிபர்களுடன் பார்ட்டிகளுக்கு வருவது, அப்படியே நட்சத்திரஹோட்டல்களில் உல்லாசமாக இருந்துவிட்டுத் திரும்புவதுமாக இருந்து வந்தார்.

இந்த விபச்சாரச் செயல்களுக்கு அவரது தாயாரும், தம்பியுமே உடந்தையாகவும் இருந்து வந்தது தான் மகாகேவலமான செய்தி. சமீப காலமாக இவரது நடவடிக்கைகளை விபச்சாரத் தடுப்புப் போலீசார் கண்காணித்துவந்தனர்.

இந் நிலையில் வினிதாவுக்கு புரோக்கராக செயல்பட்டு வந்த அன்வர் ஷாவின் செல்போனை போலீசார் ஒட்டுகேட்டனர். அப்போது சென்னையை மையமாகக் கொண்ட சர்வதேச கார் நிறுவனத்தின் மூத்த அதிகாரியானவி.ஜே.லீ என்பவர் அன்வர் ஷாவைத் தொடர்பு கொண்டு நடிகை வேண்டும் என்று கேட்க, வினிதாவின் பெயரைச்சொன்னார் அன்வர்ஷா.

இதற்கு லீ ஒப்புக் கொண்டார். இதையடுத்து வினிதாவுடனும் அன்வர் ஷா பேசினார். இதையும் போலீசார் ஒட்டுகேட்டனர். அப்போது ஒரு இரவு லீ உடன் உல்லாசமாக இருக்க வினிதாவுக்கு ரூ. 1.5 லட்சம் வாங்கித் தருவதாகஅன்வர் ஷா கூற, பேரம் படித்தது.

திட்டமிட்டபடி அந்த சர்வதேச கார் நிறுவனத்தின் அண்ணா நகர் கெஸ்ட் ஹவுசுக்கு வினிதா நேற்றிரவு வந்தார்.அவரைப் பின் தொடர்ந்து வந்த போலீசார் கெஸ்ட் ஹவுசி வெளியே நின்று கொண்டனர்.

வினிதாவை லீ வரவேற்று அழைத்துச் சென்றார். அவருடன் அவரது தாயார் லட்சுமி, தம்பி சங்கர் மற்றும்டிரைவரும் உள்ளே சென்றனர்.

இதையடுத்து அதிரடியாக உள்ளே புகுந்த போலீசார் வினிதாவைக் கைது செய்தனர். தொடர்ந்து அவரது தாய்,தம்பி, அதிகாரி லீ, கார் டிரைவர் ஆகியோரையும் கைது செய்தனர்.

இவர்கள் தவிர ஏற்கனவே அந்த விருந்தினர் இல்லத்தில் இருந்த பப்பி (21), சுமித்ரா (18) ஆகிய இருபெண்களையும் போலீசார் கைது செய்தனர். இவர்களுக்கும் விபச்சாரத்தில் தொடர்பு உள்ளதாகத் தெரிகிறது.

அந்த பங்களாவில் இருந்த 3 கார்கள், வினிதா, லீயின் செல்போன்கள் மற்றும் அதில் கிடைத்த நம்பர்களை வைத்து3 புரோக்கர்களும் கைது செய்யப்பட்டனர்.

சமீபகாலமாக சிறிய அளவில் சினிமாவில் நடித்து வந்த விலாசினி, டிவி நடிகை புவனேஸ்வரி, மலையாள நடிகைவாணி விஸ்வநாத்தின் தங்கை ஆகியோர் உள்பட பலர் பிடிபட்டாலும் முன்னணியில் இருந்த நடிகைகள் யாரும்பிடிபடவில்லை.

இந் நிலையில் கடந்த சில ஆண்டுக்குள் முன் வரை தமிழ்த் திரையுலகின் முக்கிய நடிகையாக இருந்த வினிதாபிடிபட்டுள்ளார்.

  • விபச்சாரம்: வினிதாவின் வாக்குமூலம்

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X