Don't Miss!
- News நோட்டாவில் அதிக ஓட்டு.. தேர்தல் ரத்தாகுமா? என்னங்க சொல்றீங்க.. நீங்க நம்பலைனாலும் ‘இது’ தான் நெசம்!
- Sports தோனிக்கு இது தான் கடைசி சீசனா? ரெய்னா சொன்னதை கேளுங்க!
- Lifestyle சாணக்கிய நீதி படி ஒரு நல்ல குடும்ப தலைவரிடம் இந்த 6 குணங்கள் இருக்கணுமாம்...அப்பதான் குடும்பம் நல்லா இருக்கும்
- Technology ரூ.10,000 குள்ள 2.. ரூ.20,000 குள்ள 2.. Redmi-யின் 5 முரட்டு போன்கள் மீது.. வெயிட்டா ரூ.2000 டிஸ்கவுண்ட்!
- Automobiles உலகம் முழுவதும் ராயல் என்ஃபீல்டு பைக்கை வாடகைக்கு எடுக்கலாம்! எப்படி தெரியுமா?
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
தனுஷ் - வெற்றி மாறனின் "விசாரணை".. பிப்ரவரிக்குத் தள்ளி வைப்பு!
சென்னை: ஜனவரி 29 ல் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்ட வெற்றிமாறனின் விசாரணை திரைப்படம் தற்போது பிப்ரவரி 5 ம் தேதிக்கு தள்ளிப் போயிருக்கிறது.
நடிகர் தனுஷின் வொண்டர்பார் நிறுவனமும், வெற்றிமாறனின் கிராஸ் ரூட் நிறுவனமும் இணைந்து தயரித்திருக்கும் படம் விசாரணை. பிரபல எழுத்தாளர் எம்.சந்திரசேகரின் லாக் - அப் நாவலை அடிப்படையாக வைத்து விசாரணை உருவாகி இருக்கிறது.
அட்டகத்தி தினேஷ், ஆனந்தி, முருகதாஸ், சமுத்திரக்கனி, கிஷோர் நடித்திருக்கும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசைமயமைத்து இருக்கிறார்.
72 ஆண்டு கால வெனீஸ் திரைப்பட வரலாற்றில் திரையிடும் பிரிவில் கலந்து கொண்ட முதல் தமிழ்ப்படம் என்ற பெருமையை விசாரணை பெற்றது.
மேலும் மனித உரிமைகள் பற்றிய சினிமா பிரிவில் விருதுக்கான படமாகவும் விசாரணை அறிவிக்கப்பட்டது. வெளியாகும் முன்பே பல்வேறு விருதுகளையும் விசாரணை வென்றிருப்பதால் இப்படம் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகமாக இருக்கிறது.
இந்நிலையில் ஜனவரி 29 ல் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்ட விசாரணை தற்போது பிப்ரவரி 5 ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
பொங்கல் தினத்தில் கதகளி, தாரை தப்பட்டை, ரஜினிமுருகன் மற்றும் கெத்து என்று 4 திரைப்படங்கள் வெளியாகின்றன. இதனால் 2 வாரம் கழித்து உங்கள் படத்தை வெளியிடுங்கள் என்று தமிழ் சினிமாவின் மூத்த கலைஞர்கள் கூறியதை விசாரணை குழுவினர் ஏற்றுக் கொண்டனராம்.
இதனால் தான் பிப்ரவரி 5 ம் தேதிக்கு தள்ளிப் போயிருக்கிறது விசாரணை.