Don't Miss!
- News 21 மாநிலங்கள்.. 102 லோக்சபா தொகுதிகளுக்கு நாளை தேர்தல்! 2019 முடிவை எதிர்க்கட்சிகள் முறியடிக்குமா?
- Automobiles தேர்தல் முடிந்ததும் முதல் வேலையா டோல்கேட்ல இருந்து இதை தூக்கி வீசுங்க!அடுத்த அதிரடிக்கு தயாரான அரசு
- Sports IPL 2024 : கேகேஆர் அணியில் பேட்டிங் வாய்ப்பு கிடைக்கவில்லை.. என்ன காரணம்? உண்மையை சொன்ன ரிங்கு சிங்!
- Technology வாங்குனா நீதான்.. இயர்பட்ல டால்பி அட்மோஸ்.. ஹெட் டிராக்கிங்.. வயர்லெஸ் சார்ஜிங்.. எந்த மாடல்?
- Lifestyle Today Rasi Palan 18 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் கடன் வாங்குவதைத் தவிர்ப்பது நல்லது...
- Finance பர்னிச்சர் பொருட்களை வாடகைக்கு எடுப்பது லாபமா..? சொந்தமாக வாங்குவது லாபமா..?
- Education சூப்பர் சாதனை....தொழிலாளர் நலத்துறை ஆணையரின் மகள் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி
- Travel தமிழ்நாட்டில் தேனிலவு செல்வதற்கு ஏற்ற குளிர்ச்சியான அழகான மலைவாசஸ்தலங்கள்!
நட்சத்திர கிரிக்கெட், விஷால் பற்றி தவறான செய்தி... இணைய தளங்கள் மீது போலீசில் புகார்!
நடிகர் சங்கம் நடத்திய நட்சத்திர கிரிக்கெட் விஷயத்தில் விஷால் பற்றி தவறான செய்திகளை வெளியிட்ட இணைய தளங்கள் மீது கமிஷனர் அலுவலகத்தின் இன்று புகார் தரப்பட்டுள்ளது.
நட்சத்திர கிரிக்கெட் நிகழ்ச்சிக்கு அஜீத் வராததால் அவர் பாடலை நிகழ்ச்சியில் போடக் கூடாது என விஷால் தடுத்ததாக ஒரு செய்தி. அடுத்து, நட்சத்திர கிரிக்கெட் தோற்றதற்கு மக்கள்தான் காரணம் என்று விஷால் பேட்டி அளித்ததாக இன்னொரு செய்தி.
இந்த இரு செய்திகளும் சில இணையதளங்களில் வெளியாகின. இரண்டுமே பொய்யானவை என விஷால் மறுத்த பிறகும் தொடர்ந்து வெளியாகிக் கொண்டிருந்தன.
இந்த நிலையில் இதுகுறித்து விஷால் தலைமை ரசிகர் மன்றத்தின் தலைவர் ஜெயசீலன், செயலாளர் ஹரி ஆகியோர் சென்னை மத்திய குற்றப் பிரிவு அலுவலகத்தில் கொடுத்துள்ள புகாரில், "தென்னிந்திய நடிகர் சங்க பொதுச் செயலாளர் விஷால் அவர்களைப் பற்றிய போலியான செய்தியை சில இணைய தளங்கள் வெளியிட்டுள்ளனர்.
அந்த செய்திகள் அனைத்தும் விஷாலை தவறாக சித்தரித்து எழுதப்பட்டுள்ளன.
நட்சத்திர கிரிக்கெட், #விஷால் பற்றி தவறான செய்தி. இணைய தளங்கள் மீது போலீசில் புகார்! https://t.co/pAlUt40aXQ #Vishal pic.twitter.com/NTDgdavFo5
— Tamil Filmibeat (@FilmibeatTa) April 21, 2016
இந்த செய்தி வெளியிட்டவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்குமாறு விஷால் ரசிகர் மன்றத்தின் சார்பாக கேட்டுக் கொள்கிறோம்," என்று குறிப்பிட்டுள்ளனர்.
இந்த புகார் தொடர்பான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.