Don't Miss!
- News அத்தை ராதிகா பாஜக வேட்பாளர்.. திமுகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்யும் எம்.ஆர்.ராதா பேரன் வாசு விக்ரம்
- Lifestyle ஒரு டைம் காளானை வாங்கி இப்படி ட்ரை பண்ணுங்க.. சும்மா அள்ளும்...
- Finance மக்கள் அதிகம் வாங்குவதாலேயே தங்கம் விலை உயர்கிறதா..? உண்மை என்ன..?!
- Automobiles பெட்ரோல் போடுவதை போல ஹைட்ரஜனை நிரப்பிட்டா 3,000 கிமீ நிற்காம போகும்! உலக சாதனை படைத்த ரயில்!
- Sports மும்பை பாணியில் கம்பீர் எடுத்த முடிவு.. 16 வயது சிறுவனை ஒப்பந்தம் செய்த கேகேஆர்.. யாருப்பா அந்த பையன்?
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Technology அம்மா வாங்க.. ஐயா வாங்க! கிட்டத்தட்ட பாதி விலை டிஸ்கவுண்ட்.. Amazon-ல் கூவிக்கூவி விற்கப்படும் ஐந்து 4K TVகள்!
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
நடிகர் விஷால், கார்த்தி, நாசருக்கு கொலை மிரட்டல்..சினிமா வட்டாரத்தில் பரபரப்பு !
சென்னை : தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகளான நடிகர் விஷால், கார்த்தி, நாசர் ஆகியோருக்கு அடுத்தடுத்து கொலை மிரட்டல் விடுத்தவர் மீது காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2019ம் ஆண்டு தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் நடைபெற்றது. இதில் பாக்யராஜ் தலைமையிலான ஒரு அணியும், நாசர் தலைமையிலான ஒரு அணியும் போட்டி இட்டனர். இந்த தேர்தலை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வாக்கு எண்ணிக்கைக்கு தடைவித்தார். இதனால், தேர்தலில் பதிவான வாக்குகள் தனியார் கல்லூரியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தது.
தனி நீதிபதியின் தீர்ப்பை எதிர்த்து நாசர் தலைமையிலான அணியினர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி தனி நீதிபதியின் தீர்ப்பை ரத்து செய்தார். இதையடுத்து, பதிவான வாக்குகள் எண்ணப்பட்டன. இதில், நாசர் தலைமையிலான அணி மகத்தான வெற்றி பெற்று, தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தலைவராக நாசர், பொதுச்செயலாளர் விஷால் மற்றும் பொருளாளராக கார்த்தி பதவியேற்றுக் கொண்டனர்.
இந்நிலையில், தற்போது, தென்னிந்திய நடிகர் சங்கத்தின் மேலாளராக தர்மராஜ் தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், நாசர், விஷால் மற்றும் கார்த்தி ஆகியோருக்கு நடிகர் சங்கத்தின் உறுப்பினராக உள்ள துணை நடிகர் ராஜதுரை என்பவர் வாட்ஸ் அப் எண்ணிற்கு கடந்த மே 27-ம் தேதி ஆடியோ ஒன்றை அனுப்பி உள்ளார்.
லத்தி படப்பிடிப்பில் விபத்துக்குள்ளான விஷால்.. ஷூட்டிங் பாதியில் நிறுத்தம் !
அந்த ஆடியோவில் சங்க நிர்வாகிகளை மிகவும் அசிங்கமாக திட்டியும், கொலை மிரட்டல் விடுத்தும் ராஜதுரை பேசியுள்ளார். இதனால் உடனே ராஜதுரை மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆதாரங்களுடன் புகார் அளித்துள்ளதாக தெரிவித்துள்ளார். இந்த புகார் தொடர்பாக தேனாம்பேட்டை போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Recommended Video
நடிகர் சங்கத் தேர்தலில் வெற்றி பெற்ற விஷால், நடிகர் சங்க கட்டிடம் கட்டுவது தான் எங்கள் முதல் பணி அதற்காகத்தான் இந்த தேர்தலில் போட்டியிட்டு வென்று இருக்கும் என்று வீர வசனம் பேசினார். மேலும் நடிகர் சங்க கட்டிடம் கட்டிய பிறகுதான் எனக்கு திருமணம் என்றும் கூறியிருந்தார். ஆனால் இப்பொழுது எனக்கு என்ன என்று விஷாலும், அவரது குழுவும் செயல்பட்டு வருவதாக குற்றச்சாட்டு உள்ளது.