Just In
- 1 hr ago
திருமணம் செய்வதாக ஏமாற்றி பாலியல் வன்கொடுமை.. ஒளிப்பதிவாளர் மீது பிரபல நடிகை மீண்டும் புகார்!
- 1 hr ago
பல பெண்களுடன் தொடர்பு.. தன்னால் கர்ப்பமான பிரபல தொகுப்பாளினி.. கருவை கலைத்து கழட்டிவிட்ட ஹேமந்த்!
- 1 hr ago
'இது ஞாபகமிருக்கா கேர்ள்ஸ்?' வேகமாக பரவும் முன்னாள் ஹீரோயின்களின் த்ரோபேக் போட்டோஸ்!
- 2 hrs ago
ராஜமவுலியின் 'ஆர்ஆர்ஆர்' ரிலீஸ் தேதி.. அறிவித்துவிட்டு அவசரமாக டெலிட் செய்த பிரபல நடிகை!
Don't Miss!
- News
ஓஹோ.. தனி சின்னத்தில் போட்டியிட தயங்க இதுதான் காரணமா.. அப்ப "உதயசூரியன்?".. விறுவிறு விசிக..!
- Education
ரூ.1.20 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை வேண்டுமா? விண்ணப்பிக்கலாம் வாங்க!
- Finance
பழைய சீரியஸ் 100, 10, 5 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருந்து நீக்க முடிவு: ரிசர்வ் வங்கி
- Sports
அதெல்லாம் பண்ண முடியாது.. எதிரியாக இருந்தாலும் மரியாதை முக்கியம்.. கண்ணியம் காத்த ரஹானே!
- Automobiles
இந்த குடியரசு தினத்தில் புதிய ஸ்கூட்டர் வாங்கும் பிளான் இருக்கா? இதோ உங்களுக்கான டாப் 5 பட்ஜெட் ஸ்கூட்டர்கள்!!
- Lifestyle
இந்த பிரச்சினை உள்ளவர்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வது அவர்களுக்கு ஆபத்தை அதிகரிக்குமாம்...!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
சினிமாவை விட சூப்பர் சாகசம்... ரவுடிகளை மடக்கிய போலீசுக்கு விஷால் பாராட்டு!

சென்னை: மாங்காடு அருகே 67 சமூக விரோதிகளை மடக்கிப் பிடித்த போலீசாருக்கு பாராட்டுத் தெரிவித்துள்ளார் நடிகர் விஷால்.
மாங்காடு அருகே உள்ள மலையம்பாக்கத்தில் நடந்த ரவுடியின் பிறந்த நாள் நிகழ்ச்சியொன்றில் கலந்து கொள்ள வந்த ரவுடிகளை போலீசார் துப்பாக்கியுடன் சுற்றி வளைத்து கைது செய்தனர். இவர்களில் பலர் போலி பத்திரிகையாளர்கள்.

போலீஸ் நடவடிக்கையை பலரும் பாராட்டி வருகிறார்கள். நடிகர் விஷாலும் பாராட்டு தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கையில், "துப்பாக்கி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் ஒரே இடத்தில் கூடிய 67 சமூகவிரோதிகளை ஒரு ரகசிய நடவடிக்கை மூலம் சென்னை மாநகர காவல்துறை கைது செய்திருப்பது மிகவும் பாராட்டுக்குரியது.
இந்த துணிகர செயலுக்கு தலைமை வகித்த சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதனுக்கும், சிறப்பாக செயல்பட்ட துணை ஆணையர் சர்வேஷுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
திரைப்படங்களில் கற்பனை காட்சிகளாக அமைக்கும் சாகசங்களை நிஜத்திலேயே காவல்துறையினர் நிகழ்த்திக்காட்டியிருப்பது அதி அற்புதமானது. இவர்கள் தான் உண்மையான ஹீரோக்கள்,'' என்று கூறியுள்ளார்.