Don't Miss!
- Automobiles மாருதி, டாடா, ஹூண்டாய் நிறுவனங்களை ஒரு கை பார்க்க வரும் நிஸான் கார்... போட்டி அனல் பறக்க போகுது...
- Sports வாழ்க்கைன்னா ஒரு சில அடிகள் விழத்தான் செய்யும்.. எல்லா போட்டியிலும் வெல்ல முடியாது.. பாட் கம்மின்ஸ்
- News சிறையில் கணவர்.. இடைத்தேர்தலில் களமிறங்கும் ஜார்கண்ட் Ex முதல்வர் ஹேமந்த் சோரனின் மனைவி கல்பனா
- Lifestyle 100 ஆண்டுகளுக்கு பின் உருவாகியுள்ள திரிகிரக யோகம்: அடுத்த 5 நாட்கள் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்..
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
முதல்வர் அவர்களே, தமிழ் சினிமாவுக்கு மணிமண்டபம் கட்டிவிடாதீர்கள்! - விஷால்
Recommended Video
சென்னை: மேலும் மேலும் வரி விதித்து தமிழ் சினிமாவுக்கு மணிமண்டபம் கட்டி விடாதீர்கள் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார் தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால்.
சில வாரங்களுக்கு முன்புதான் தமிழ் சினிமாவில் ஜிஎஸ்டி வரி அமலுக்கு வந்தது. இதனால் சினிமா டிக்கெட்டுகளின் விலை தாறுமாறாக உயர்ந்தது.
இப்போது உள்ளூர் வரி என்ற பெயரில் 10 சதவீதம் கூடுதல் வரியை தியேட்டர்களுக்கு விதித்துள்ளது தமிழக அரசு. இதனால் கட்டண வசூலிலிருந்து 10 சதவீதம் தொகையை அரசுக்கு தியேட்டர்கள் செலுத்த வேண்டி வரும். இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. தியேட்டர்களை மூடுவதாக உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர்.
இன்னொரு பக்கம் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால், இனி புதுப் படங்களை வெளியிடுவதில்லை என ஸ்ட்ரைக் அறிவித்துள்ளார்.
நேற்று செய்தியாளர்களிடம் பேசிய விஷால், "ஏற்கெனவே 28 சதவீத ஜிஎஸ்டி வரியால் தமிழ் சினிமா தள்ளாடிக் கொண்டிருக்கிறது. இப்போது கூடுதலாக 10 சதவீத உள்ளூர் வரி வேறு.
கர்நாடகா போன்ற மாநிலங்களில் வசூலிக்கப்படும் வரியை சினிமாவுக்கே திருப்பித் தருகிறார்கள். இங்கு மட்டும் மேலே மேலே வரி விதிக்கிறார்கள்.
முதல்வருக்கு ஒரு வேண்டுகோள். இப்படி வரிகள் விதித்து தமிழ் சினிமாவுக்கும் மணி மண்டபம் கட்டிவிடாதீர்கள்.
இந்த வரிகளை எதிர்த்து வேறு வழியே இல்லாமல் வரும் வெள்ளிக்கிழமை முதல் புதிய படங்களை வெளியிடுவதில்லை என முடிவெடுத்துள்ளோம்," என்றார்.