Don't Miss!
- News கோவையில் திமுக, அதிமுக ரூ.1000 கோடி செலவு செய்துள்ளனர்.. ஓட்டு போட்ட பின் அண்ணாமலை பகீர் புகார்!
- Lifestyle எப்பவும் ஒரே மாதிரி சட்னி செய்யாம.. ஒருமுறை தீயில் சுட்ட தக்காளி சட்னியை செய்யுங்க.. டேஸ்ட் சும்மா அள்ளும்..
- Sports ரூ.14 கோடி வீரருக்கு ஆப்பு.. லக்னோ பிட்சால் சிஎஸ்கே அணியில் நடக்கப்போகும் மாற்றம்.. ருதுராஜ் முடிவு!
- Technology ரூ.10,000 குள்ள 2.. ரூ.20,000 குள்ள 2.. Redmi-யின் 5 முரட்டு போன்கள் மீது.. வெயிட்டா ரூ.2000 டிஸ்கவுண்ட்!
- Automobiles உலகம் முழுவதும் ராயல் என்ஃபீல்டு பைக்கை வாடகைக்கு எடுக்கலாம்! எப்படி தெரியுமா?
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
சரித்திரப் படத்தை கையில் எடுக்கும் விஷ்ணுவர்த்தன்
சென்னை: இதுநாள்வரை காதல் மற்றும் த்ரில்லர் படங்களை எடுத்து வந்த இயக்குநர் விஷ்ணுவர்த்தன் முதன்முறையாக ஒரு சரித்திரப் படத்தை எடுக்கவிருக்கிறார்.
மூத்த எழுத்தாளரும், வசனகர்த்தாவுமான பாலகுமாரனுடன் இணைந்து இந்தப் படத்திற்கான கதையை விஷ்ணுவர்த்தன் தயார் செய்து கொண்டிருக்கிறார்.
இதைப் பற்றி அவர் கூறும்போது "இந்தக் கதைக்காக தமிழ்நாடு முழுவதும் சுற்றி அலைந்து பல தகவல்களை சேகரித்துக் கொண்டிருக்கிறேன். பல்வேறு கல்வெட்டுகளில் நிறைய தகவல்கள் கொட்டிக் கிடக்கின்றன.
தமிழ்நாடு முழுவதும் கோவில் கல்வெட்டுகளில் உள்ள தகவல்களை வைத்து இந்தப் படத்திற்கான கதையை எழுதவிருக்கிறேன். 9 ம் நூற்றாண்டில் உள்ள மக்களின் வாழ்க்கை அவர்களின் பழக்க வழக்கங்கள் ஆகியவைதான் படத்தின் மையக்கரு" என்று கூறியிருக்கிறார்.
இந்தப் படத்தில் யார் நடிக்கிறார்கள் என்பது பற்றி இன்னும் முடிவு செய்யவில்லை என்றும், கதை தயாரானதும் பொருத்தமானவர்களை தேர்ந்தெடுத்து நடிக்க வைக்கவிருப்பதாகவும் விஷ்ணுவர்த்தன் தெரிவித்திருக்கிறார்.
சில வருடங்களுக்கு முன்பே சரித்திரப் படத்தை எடுக்க வேண்டும் என்று நினைந்த விஷ்ணுவர்த்தனுக்கு இப்போதுதான் அதற்கான நேரம் அமைந்திருக்கிறதாம்.
விரைவில் படம் குறித்த அதிகாரப்பூர்வமான தகவல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.