சன் டிவியில் தில்லானா மோகனாம்பாள் படத்தை பார்த்துவிட்டு நடிகர் விவேக் என்ன செய்தார் தெரியுமா?
சென்னை: சன்டிவியில் ஒளிபரப்பப்பட்ட தில்லானா மோகனாம்பாள் திரைப்படத்தை பார்த்துவிட்டு, ஆச்சி மனோரமாவை சந்தித்து ஆசி பெற்றுள்ளார் நடிகர் விவேக்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை, மாலையில், காலத்தால் அழியாத காப்பியமான, தில்லானா மோகனாம்பாள் திரைப்படம் காண்பிக்கப்பட்டது. இதை நடிகர் விவேக் பார்த்து ரசித்துள்ளார்.
அந்த படத்தில் சகலகலா வல்லியாக வரும் மனோரமாவின் நடிப்பை பார்த்துவிட்டு வியந்து போனார் விவேக். இதையடுத்து ஆச்சி நியாபகம் வரவே, கிளம்பிவிட்டார் மனோரமா வீட்டுக்கு. அங்கு சென்று மனோரமாவிடம் ஆசி பெற்றுள்ளார்.
இந்த படத்தை தனது டிவிட்டர் தளத்தில் விவேக் பகிர்ந்து கொண்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











