கொலவெறிக்கு முதல் வாழ்த்து சொன்னவரே விவேக்தான்! - அனிருத்
எனது கொலை வெறி.. பாடலுக்கு முதல் வாழ்த்துச் சொன்னவரே நடிகர் விவேக்தான் என்றார் இசையமைப்பாளர் அனிருத்.
விவேக் நாயகனாக நடித்த பாலக்காட்டு மாதவன் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்று, முதல் சிடியைப் பெற்றுக் கொண்ட அனிருத் பேசுகையில், "நான் இந்தப் படத்தில் ஒரு பாடல் பாடியிருக்கிறேன். அதற்கு காரணங்கள் இரண்டு உண்டு. முதலில் அந்தப் பாடல் பிடித்திருந்தது. இரண்டாவது விவேக் சார் எனக்குப் பிடித்தவர்.

நான் முதலில் இசையமைத்த கொலவெறி பாடலுக்கு யார் யாரோ பாராட்டினார்கள். அமிதாப் முதல் பிரதமர் வரை அந்தப் பாடல் சென்றடைந்தது.
ஆனால் திரையுலகிலிருந்து முதலில் வந்த வாழ்த்து விவேக் சாரிடமிருந்துதான். அதுவும் ஒரு டிவி நிகழ்ச்சியிலிருந்தபடி எனக்கு போன் செய்து பாராட்டினார். அதை நான் என்றுமே மறக்க மாட்டேன். அந்த அன்புக்காகத்தான் இன்று இங்கு வந்திருக்கிறேன்," என்றார்.


Click it and Unblock the Notifications











