Don't Miss!
- News கோவையில் திமுக, அதிமுக ரூ.1000 கோடி செலவு செய்துள்ளனர்.. ஓட்டு போட்ட பின் அண்ணாமலை பகீர் புகார்!
- Lifestyle எப்பவும் ஒரே மாதிரி சட்னி செய்யாம.. ஒருமுறை தீயில் சுட்ட தக்காளி சட்னியை செய்யுங்க.. டேஸ்ட் சும்மா அள்ளும்..
- Sports ரூ.14 கோடி வீரருக்கு ஆப்பு.. லக்னோ பிட்சால் சிஎஸ்கே அணியில் நடக்கப்போகும் மாற்றம்.. ருதுராஜ் முடிவு!
- Technology ரூ.10,000 குள்ள 2.. ரூ.20,000 குள்ள 2.. Redmi-யின் 5 முரட்டு போன்கள் மீது.. வெயிட்டா ரூ.2000 டிஸ்கவுண்ட்!
- Automobiles உலகம் முழுவதும் ராயல் என்ஃபீல்டு பைக்கை வாடகைக்கு எடுக்கலாம்! எப்படி தெரியுமா?
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
'நண்பா உனக்கெதற்கு விருது? நீதான் எங்கள் விருது'... விக்ரமிற்கு ஆறுதல் சொன்ன விவேக்
சென்னை: விக்ரமிற்கு தேசிய விருது கிடைக்காதது அவரின் ரசிகர்கள் தொடங்கி நட்சத்திரங்கள் வரை பலரையும் சோகத்தில் ஆழ்த்தியிருக்கிறது.
2 வருடங்களுக்கு மேலாக விக்ரம் தன்னுடைய முழு உழைப்பையும் கொட்டி ஐ படத்தில் நடித்திருந்தார். ஆனால் நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்ட தேசிய விருதுகளில் விக்ரமின் பெயர் இடம்பெறவில்லை.
இதுகுறித்து கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் காரசாரமான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் நடிகர் விவேக் கவிதை வடிவில் விக்ரமிற்கு ஆறுதல் கூறியிருக்கிறார்.
"நண்பா விக்ரம்,"ஐ" காக உடலை பெருக்கினாய்;
பின் சுருக்கினாய்; அகோர உருவில் உயிர் உருக்கினாய்;
உனக்கெதற்கு விருது? நீதான் எங்கள் விருது!.
என்று கூறியிருக்கிறார். ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் விக்ரமிற்கு விருது கிடைக்காதது தேசிய விருதுக்கு ஏற்பட்ட இழப்பு என்று கருத்துத் தெரிவித்திருந்தார்.
மேலும் சமுத்திரக்கனி உள்ளிட்ட நட்சத்திரங்கள் பலரும் விக்ரமிற்கு விருது கிடைக்காதது வருத்தமே, என்று கருத்துத் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.