என்னாது, டி.ஆர். தன்ஷிகாவை திட்டி அழ வைத்தது பப்ளிசிட்டி ஸ்டண்ட்டா?
சென்னை: விழித்திரு செய்தியாளர் சந்திப்பின்போது டி.ஆர். தன்ஷிகாவை திட்டி அழ வைத்தது பப்ளிசிட்டி ஸ்டண்ட் என்று கூறப்படுகிறது.
விதார்த், தன்ஷிகா உள்ளிட்டோர் நடித்துள்ள விழித்திரு படத்தின் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. அப்போது பேசிய தன்ஷிகா அங்கிருந்த டி. ராஜேந்தரின் பெயரை குறிப்பிட மறந்துவிட்டார்.
இதனால் டி.ஆர். தன்ஷிகாவை கடுமையாக விமர்சித்து அழ வைத்தார்.

பப்ளிசிட்டி
டி.ஆர். ஒரு சின்ன விஷயத்தை பெரிதாக்கி விமர்சித்து தன்ஷிகாவை அழ வைத்தது எல்லாம் பப்ளிசிட்டி ஸ்டண்ட் என்று சமூக வலைதளங்களில் கூறப்படுகிறது.
ஸ்ரீப்ரியா
நடிகை ஸ்ரீப்ரியா தன்ஷிகாவுக்கு ஆதரவாக ட்வீட்டியதை பார்த்த ஒருவர் மேடம் இது எல்லாம் பப்ளிசிட்டி ஸ்டண்ட் இதை டிஆரே கூறினாரே என்று தெரிவித்துள்ளார்.

வெட்கம்
இது விளம்பரத்திற்காக என்றால் இந்த சீப் டிராமாவை நடத்திய படக்குழு வெட்கப்பட வேண்டிய விஷம் என்று ஸ்ரீப்ரியா ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

ஒர்க்அவுட்
பப்ளிசிட்டி ஸ்டண்டோ இல்லையோ ஆனால் அன்று நடந்த விஷயத்தால் அனைவரும் அதை பற்றி தான் பேசிக் கொண்டிருக்கிறார்கள். படத்திற்கு நல்ல விளம்பரம் கிடைத்துவிட்டது.


Click it and Unblock the Notifications











