Don't Miss!
- News அரசு புறம்போக்கு நிலம் என கைவிரித்த அதிகாரிகள்.. பட்டா வழங்க மறுப்பு.. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Lifestyle 18 ஆண்டுகளுக்கு பின் உருவான அங்காரக யோகம்: ஜூன் வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்...
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Automobiles பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
புதுமுக இயக்குனர்களை பார்த்தாலே தெறித்து ஓடுவோம்: பிரபல நடிகர் பேட்டி
திருவனந்தபுரம்: முன்பெல்லாம் புதுமுக இயக்குனர்கள் என்றாலே தெறித்து ஓடுவோம் என்று நடிகர் மனோஜ் கே. ஜெயன் தெரிவித்துள்ளார்.
மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி படங்களில் நடித்து வருபவர் மனோஜ் கே. ஜெயன். நடிகை ஊர்வசியின் முன்னாள் கணவர். தற்போது அவர் மலையாள படங்களில் ரொம்பவே பிசியாக உள்ளார்.
இந்நிலையில் சினிமா குறித்து அவர் கூறும்போது,
இயக்குனர்
என்னை தேடி வரும் அனைத்து வாய்ப்புகளையும் நான் ஏற்றுக் கொள்வது இல்லை. முன்பெல்லாம் இயக்குனர் புதுமுகம் என்றால் தெறித்து ஓடுவோம். ஆனால் தற்போது அப்படி இல்லை.
அறிவாளிகள்
முன்பு சத்யன், கமல், ஜெயராஜ், ஜோஷி போன்றவர்களின் படங்களில் தான் நடிப்போம். ஆனால் தற்போது புதுமுக இயக்குனர்கள் மிகவும் திறமைசாலிகளாக உள்ளனர்.
ஆர்வம்
தற்போது இயக்குனர் புதுமுகமாக இருந்தால் அவர் படத்தில் நடிக்க மிகவும் ஆர்வமாக உள்ளோம். ஏனென்றால் அவர்கள் படங்களை பற்றி நன்கு தெரிந்து கொண்ட பிறகு சினிமா துறைக்கு வருகிறார்கள்.
ஹீரோ
நான் ஹீரோவாக நடித்துள்ளேன். அதன் பிறகு வில்லன், குணச்சித்திர வேடங்களில் நடிக்கத் துவங்கினேன். இந்த மாற்றம் அதுவாக நடந்தது. என் சினிமா பயணம் சவுகரியமாக உள்ளது. ஹீரோவாக நடிக்க நான் தயாராக இல்லை என்றார் மனோஜ்.