Don't Miss!
- Technology அடிச்சான் பாரு realme.. இவ்வளவு கம்மி விலையில Realme Narzo 70 Pro 5G போனா? கண்டிப்பா வாங்காம இருக்கமாட்டீங்க..
- News திமுக கூட்டணியில் கொமதேக வேட்பாளர் சூர்யமூர்த்திக்கு பெரிய சிக்கல்.. வேகமாக பரவும் பழைய வீடியோ
- Sports IPL 2024 CSK : ருதுராஜ் கெய்க்வாட் உடன் ஓபனிங்கில் தல தோனி? சிஎஸ்கே அணியில் நடக்கப் போகும் ட்விஸ்ட்
- Lifestyle உடலின் இந்த பகுதிகளில் அடிக்கடி வீக்கம் ஏற்படுதா? அப்ப உங்க கல்லீரல் மோசமான நிலையில் இருக்குன்னு அர்த்தம்...
- Automobiles கேரளாவுக்கு சென்றால் இந்த சொர்க்கத்தை மட்டும் அனுபவிக்காம வந்துடாதீங்க!! வெறும் ரூ.20இல் கிடைக்குது!
- Finance டிசிஎஸ் ஊழியர்களுக்கான சம்பளம் உயர்வு.. வந்தது முக்கிய அறிவிப்பு..!!
- Education கல்வித்தரத்தில் சமரசம் செய்துகொள்ள எம்ஓபி வைஷ்ணவ் மகளிர் கல்லூரி
- Travel தமிழ்நாட்டின் அரண்மனை கிராமம் இது தான் – தமிழர்கள் ஒவ்வொருவரும் கட்டாயம் பார்க்க வேண்டியம் இடம்!
புதுமுக இயக்குனர்களை பார்த்தாலே தெறித்து ஓடுவோம்: பிரபல நடிகர் பேட்டி
திருவனந்தபுரம்: முன்பெல்லாம் புதுமுக இயக்குனர்கள் என்றாலே தெறித்து ஓடுவோம் என்று நடிகர் மனோஜ் கே. ஜெயன் தெரிவித்துள்ளார்.
மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி படங்களில் நடித்து வருபவர் மனோஜ் கே. ஜெயன். நடிகை ஊர்வசியின் முன்னாள் கணவர். தற்போது அவர் மலையாள படங்களில் ரொம்பவே பிசியாக உள்ளார்.
இந்நிலையில் சினிமா குறித்து அவர் கூறும்போது,
இயக்குனர்
என்னை தேடி வரும் அனைத்து வாய்ப்புகளையும் நான் ஏற்றுக் கொள்வது இல்லை. முன்பெல்லாம் இயக்குனர் புதுமுகம் என்றால் தெறித்து ஓடுவோம். ஆனால் தற்போது அப்படி இல்லை.
அறிவாளிகள்
முன்பு சத்யன், கமல், ஜெயராஜ், ஜோஷி போன்றவர்களின் படங்களில் தான் நடிப்போம். ஆனால் தற்போது புதுமுக இயக்குனர்கள் மிகவும் திறமைசாலிகளாக உள்ளனர்.
ஆர்வம்
தற்போது இயக்குனர் புதுமுகமாக இருந்தால் அவர் படத்தில் நடிக்க மிகவும் ஆர்வமாக உள்ளோம். ஏனென்றால் அவர்கள் படங்களை பற்றி நன்கு தெரிந்து கொண்ட பிறகு சினிமா துறைக்கு வருகிறார்கள்.
ஹீரோ
நான் ஹீரோவாக நடித்துள்ளேன். அதன் பிறகு வில்லன், குணச்சித்திர வேடங்களில் நடிக்கத் துவங்கினேன். இந்த மாற்றம் அதுவாக நடந்தது. என் சினிமா பயணம் சவுகரியமாக உள்ளது. ஹீரோவாக நடிக்க நான் தயாராக இல்லை என்றார் மனோஜ்.