Don't Miss!
- Finance சுட்டெரிக்கும் சூரியன்.. உங்க பர்ஸையும் சுடுகிறது..!! ஆர்பிஐ வெளியிட்ட முக்கிய தகவல்..!!
- Technology புதிய கட்டணம்.. அம்பானி போட்ட புது குண்டு.. ஏப்.25 முதல் JioCinema ஆப் முழுசா FREE-ஆ கிடைக்காது!
- News நாயுடுவுடன் கைகோர்த்த காபு..தனித்து நிற்கும் ரெட்டி! ஆந்திராவை ஆள போவது யார்? சாதிதான் அங்கு எல்லாமே
- Automobiles இது கார் இல்ல மிதக்கும் கப்பல்!! புதுசா வாங்கியிருக்கும் இந்த நடிகர் யாரென்று தெரிகிறதா?
- Lifestyle Constipation: மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்து உடனே விடுபடணுமா? இந்த பானங்களை தினமும் குடிங்க..
- Sports IPL 2024: வெட்கத்தை விட்டு சொல்றேன்.. சிஎஸ்கே அணியால் இதை கூட செய்ய முடியலை.. புலம்பிய பிளெம்மிங்
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
நடிகர்களை செதுக்கும் சிற்பி... அவர்கிட்ட வேலை செஞ்சது பாக்கியம்... அருண் விஜய் பாராட்டு
சென்னை : நடிகர் அருண் விஜய் தேர்ந்தெடுத்த கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.
மணிரத்னத்தின் இயக்கத்தில் செக்க சிவந்த வானம் என்ற படத்தில் தியாகு என்ற கதாபாத்திரத்தில் மிரட்டியிருந்தார்.
இன்ஸ்டாவில் கலக்கு வரும் யுவன் சங்கர் ராஜா !
இந்நிலையில் மணிரத்னம் போன்ற ஜாம்பவானின் இயக்கத்தில் நடித்தது தனது பாக்கியம் என்று அவர் தனது பாராட்டை தெரிவித்துள்ளார்.
முக்கிய கதாபாத்திரங்கள்
நடிகர் அருண் விஜய் முக்கியமான மற்றும் தேர்ந்தெடுத்த படங்களில் நடித்து வருகிறார். கேரக்டர்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதே இவரது தேர்வாக உள்ளது. என்னை அறிந்தால் படத்தில் அஜித்தின் வில்லனாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். சில காட்சிகளில் அஜித்திற்கே சவால் விடும் வகையில் இவரது நடிப்பு காணப்பட்டது.
சிறப்பான அருண் விஜய்
மணிரத்னம் இயக்கத்தில் கடந்த 2018ல் வெளியான செக்கச் சிவந்த வானம் படத்தில் முக்கியமான கேரக்டரில் நடித்திருந்தார். கேங்ஸ்டர் படமான இந்த படத்தில் சிம்பு, விஜய் சேதுபதி, அரவிந்த் சாமி உள்ளிட்டவர்களும் முக்கியமான ரோல்களில் நடித்திருந்த நிலையில் அருண் விஜய்யின் தியாகு கேரக்டர் மிகுந்த வரவேற்புக்கு உள்ளானது.
மணிரத்னம் குறித்து பாராட்டு
இந்நிலையில் அவரது சினம் பர்ஸ்ட் லுக் வெளியீட்டையொட்டி வந்திருந்த இயக்குநர் மணிரத்னம் குறித்து அருண் விஜய் பாராட்டு தெரிவித்துள்ளார். மணிரத்னத்துடன் பணிபுரிந்த ஒவ்வொரு நிமிடத்தையும் மிகவும் விரும்பியதாக அவர் தெரிவித்துள்ளார்.
சிறப்பான சிற்பி
மேலும் மணிரத்னம் போன்ற ஜாம்பவானுடன் பணிபுரிந்தது மிகவும் பாக்கியம் என்றும் கூறியுள்ளார். ஒவ்வொரு நடிகரையும் சிறப்பாக செதுக்குபவர் என்றும் பாராட்டு தெரிவித்துள்ளார். தற்போது இவரது நடிப்பில் உருவாகியுள்ள சினம் விரைவில் ரிலீசாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.