Don't Miss!
- News கற்பனை செய்யாத விஷயங்கள் இனி நடக்கும்! மோடிக்கு 4 மாநிலங்கள் தரப்போகும் ஷாக்.. என்ன இப்படி சொல்றாரே!
- Finance கோட்டக் மஹிந்திரா வங்கி-க்கு தடை.. RBI வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!
- Automobiles 12 வயது வரை தனி சீட் கிடையாது! ஏர்லைன் சேவை நிறுவனங்களுக்கு புது உத்தரவு!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
- Technology OnePlus முரட்டு அடி.. AMOLED டிஸ்பிளே.. 32GB மெமரி.. GPS கனெக்டிவிட்டி.. 500mAh பேட்டரி.. எந்த மாடல்?
- Lifestyle உங்கள் குழந்தைகள் எடை குறைவாக உள்ளதா? இந்த 5 பொருட்களை உணவாக கொடுங்கள்.. பலன் கிடைக்கும்..!
- Sports இன்னும் 6 போட்டி.. 3ல் அடிவாங்கினால் சோலி முடிஞ்ச்.. பிளே ஆஃப் செல்ல சிஎஸ்கே என்ன செய்ய வேண்டும்?
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
ஐஸ்வர்யாவா, பரதத்திற்காக வாழ்வை அர்ப்பணித்தவர்கள் அல்லவா ஐ.நா.வில் ஆடியிருக்க வேண்டும்: முருகசங்கரி
சென்னை: ஐ. நா. சபையில் ஐஸ்வர்யா தனுஷ் பரதநாட்டியம் ஆடியது சரியில்லை என்று பரதக் கலைஞர் முருகசங்கரி லியோ பிரபு மற்றும் கதக் நடன கலைஞர் ஸ்ரீதா பாஸ்கர் தெரிவித்துள்ளனர்.
மகளிர் தினத்தையொட்டி ஐ. நா. சபையில் நடந்த கொண்டாட்டத்தில் இயக்குனர் ஐஸ்வர்யா தனுஷ் கலந்து கொண்டு பரதநாட்டியம் ஆடினார். அவர் ஆடியது பரதக் கலைஞர்கள் பலரை அதிருப்தி அடைய வைத்துள்ளது.
மேலும் நெட்டிசன்கள் ஐஸ்வர்யாவை கிண்டல் செய்து மீம்ஸ் போட்டு வருகிறார்கள்.
ஜாம்பவான்கள்
ஜாம்பவான்கள் மற்றும் தேசிய அளவில் பிரபலமான பல கலைஞர்கள் உள்ளனர். அவர்கள் தான் அந்த அரங்கில் ஆடியிருக்க வேண்டும். ஷோபானா பிரபல நடிகையாக இருந்தாலும் அவர் சிறந்த நடன கலைஞர் என்பதை யாராலும் மறுக்க முடியாது என கதக் நடன கலைஞர் ஸ்ரீதா பாஸ்கர் தெரிவித்துள்ளார்.
ஐஸ்வர்யா
நான் 14 ஆண்டுகளாக கிளாசிக்கல் நடன கலைஞராக உள்ளேன். ஐஸ்வர்யா ஒரு நடன கலைஞர் என்பதே எனக்கு அண்மையில் தான் தெரியும். அவரின் நடனம் சரியில்லை என்று ஸ்ரீதா மேலும் தெரிவித்துள்ளார்.
அதிகாரம்
எந்த துறையாக இருந்தாலும் அதிகாரம் மற்றும் பெரிய இடத்து ஆட்களை தெரிந்து வைத்திருப்பவர்களுக்கு பல வாய்ப்பு கிடைக்கிறது. ஒரு கலைஞர் அதிகாரம் உள்ளவராக இருந்தாலும் சிறந்தவராக இருந்தால் பரவாயில்லை என்று பரதநாட்டிய கலைஞரும், ஆய்வாளருமான முருகசங்கரி லியோ பிரபு கூறியுள்ளார்.
பரதம்
பரதம் சவாலான கலை. அதற்காக பலர் தங்கள் வாழ்வை அர்ப்பணித்துள்ளனர். அப்பேர்பட்டவர்கள் தான் உலக அரங்கில் நடனமாட வேண்டும். திரையுலகில் பெரிய இடத்து வாரிசுகளுக்கு முன்னுரிமை அளிப்பது கங்கனா ரனாவத் கூட அண்மையில் தெரிவித்திருந்தார். அது இங்கு மட்டும் அல்ல உலக அளவில் நடைபெறுகிறது என நினைக்கிறேன் என்கிறார் முருகசங்கரி.
-
மதுரை சித்திரை திருவிழா.. மறக்க முடியாத நாள் இதுதான்! நடிகர் சூரி எமோஷனல்.. கடைசியில் செய்தது ஹைலைட்
-
தனுஷ் - ஐஸ்வர்யா ரஜினிகாந்தை எச்சரித்த பிரபல தயாரிப்பாளர்.. பலருடன் தொடர்பு என பகீர் பேச்சு!
-
Actor Kamal haasan: டெல்லியில் துவங்கிய தக் லைஃப் பட சூட்டிங்.. கமல் எப்ப ஜாயின் ஆகுறாரு தெரியுமா?