சுசித்ராவுக்கு என்னாச்சு?: பெரிய இடத்து பிரஷரா அல்லது மிரட்டலா?

By Siva

சென்னை: பாடகி சுசித்ராவுக்கு உண்மையில் என்ன தான் ஆகிவிட்டது. அவர் பேசுவது எல்லாம் குழப்பமாக உள்ளதே.

நள்ளிரவு பார்ட்டியில் தனுஷின் ஆட்கள் தன்னை தாக்கி காயப்படுத்தியதாக ட்விட்டரில் தெரிவித்தார் பாடகி சுசித்ரா. அதன் பிறகு தனுஷின் அந்தரங்க புகைப்படங்கள் மற்றும் வீடியோவை வெளியிட்டார்.

மேலும் தனுஷ், அமலா பாலின் லீலை வீடியோவை வெளியிடுவதாக கூறினார்.

வீடியோ

வீடியோ

தனுஷ்-அமலா பால் லீலை வீடியோவை எதிர்பார்த்து நெட்டிசன்கள் பலர் இரவு முழுதும் தூங்காமல் இருந்துள்னர். ஆனால் வீடியோவை அவர் வெளியிடவில்லை. சுசிக்கு சிலர் கொடுத்த பிரஷரால் வீடியோ வெளியிடப்படவில்லை என்று கூறப்பட்டது.

சுசி

சுசி

தனிப்பட்ட பிரச்சனை காரணமாக சுசித்ரா அவ்வாறு ட்வீட்டியதாக கூறிய அவரின் கணவர் கார்த்திக் பின்னர் அவரின் கணக்கு ஹேக் செய்யப்பட்டதாக தெரிவித்தார். அதன் பின்னர் சுசிக்கு மனச்சிதைவு ஏற்பட்டதாக கூறினார். கணவரை விவாகரத்து செய்வதாக சுசி அறிவித்தார்.

மருத்துவமனை

மருத்துவமனை

தன் ட்விட்டர் கணக்கு மட்டும் அல்ல தனது கணவரின் ட்விட்டர் கணக்கும் ஹேக் செய்யப்பட்டுள்ளதாக சுசி தெரிவித்தார். மேலும் தன்னை கட்டாயப்படுத்தி மருத்துவமனையில் சேர்த்ததாகவும் அது விவாகரத்து தொடர்பானது என்றும் சுசி கூறினார்.

எதற்கு

எதற்கு

சுசியை எதற்காக வலுக்கட்டாயமாக மருத்துவமனையில் சேர்த்தார்கள் என்று தெரியவில்லை. சுசி போட்ட ட்வீட்டுகளால் அவருக்கு யாராவது பிரஷர் கொடுக்கிறார்களா அல்லது மிரட்டுகிறார்களா என்று தெரியவில்லை என சமூக வலைதளங்களில் பேசிக் கொள்கிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X