Don't Miss!
- Sports என்னங்க சொல்றீங்க? சிஎஸ்கேக்கு வருகிறாரா ஆஸி. வேகம் ஹேசல்வுட்.. உண்மை என்ன?
- News தமிழ்நாடு, புதுச்சேரியில் 40 தொகுதிகளுக்கும் இன்று லோக்சபா தேர்தல்: மாதிரி வாக்குப்பதிவு தொடங்கியது!
- Automobiles சீன நிறுவனம் கேட்ட முக்கிய சான்றை வழங்கிய இந்தியா! மத்த நாடுகள வளச்சு போட்டதபோல இந்தியாவையும் வளச்சுபோட போகுது
- Lifestyle Today Rasi Palan 19 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் நிலுவையிலுள்ள பணிகளை முடிக்க முயற்சிப்பது நல்லது...
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
சூர்யாவுக்கு கார்த்தி தவிர இன்னொரு தம்பி இருக்கிறாரா? ....இன்ஸ்டாவில் வெளியான படம்
சென்னை : நடிகர் சிவக்குமாருக்கு சூர்யா, கார்த்தி இரண்டு மகன்கள் உள்ளது அனைவருக்கும் தெரிந்த விஷயம். ஆனால் இன்ஸ்டாகிராமில் வெளியாகி உள்ள ஒரு போட்டாவால் சூர்யா-கார்த்திக்கு மற்றொரு சகோதரர் இருக்கிறாரா என அனைவரும் கேட்டு வருகின்றனர்.
குத் வித் கோமாளி 3 ல் என்ட்ரி கொடுக்கும் டாப் ஹீரோ... சர்ப்ரைஸ் ஆன ரசிகர்கள்
தமிழ் சினிமாவின் மார்க்கண்டேயன் என அழைக்கப்படுபவர் நடிகர் சிவக்குமார். இவரின் கலையுலக வாரிசுகளாக சூர்யா, கார்த்தி தற்போது தமிழ் சினிமாவின் டாப் ஹீரோக்களில் ஒருவராக அசத்தி வருகிறார்கள்.
சூர்யா, கார்த்தி பிஸி
டைரக்டர் பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்த எதற்கும் துணிந்தவன் படம் சமீபத்தில் தியேட்டர்களில் ரிலீசாகி செம வரவேற்பை பெற்று வருகிறது. குடும்ப ரசிகர்கள் கொண்டாடும் படமாக எதற்கும் துணிந்தவன் இருந்து வருகிறது. கார்த்தியும் பொன்னியின் செல்வன், விருமன் படங்களை முடித்து விட்டு சர்தார் படத்தில் நடித்து வருகிறார்.
சிவக்குமாருக்கு 3 மகன்களா
இவர்களைப் போல் சிவக்குமாரின் மகளான பிருந்தா, பாடகியாக இருக்கிறார். இவர் இன்று தனது இன்ஸ்டாகிராமில் தனக்கு மிகவும் பிடித்த போட்டோ என தனது சகோதர்களுடன் எடுத்துக் கொண்ட சிறு வயது போட்டோ ஒன்றை பகிர்ந்துள்ளார். இந்த போட்டோ அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது. சிவக்குமாருக்கு மூன்று மகன்களா என அனைவரும் கேட்க துவங்கி விட்டனர்.
அட இது தானா விஷயம்
அதோடு பிருந்தா பதிவிட்டுள்ள கேப்ஷனில், இது எனக்கு மிகவும் பிடித்த போட்டோ. எனக்கு எப்போதும் என சகோதரர்களை போல இருக்க வேண்டும் என்ற ஆசை உண்டு. அதனால் ஆண்கள் அணியும் உடையை அணிவேன். முடி வளர்க்க பிடிக்காது. ஏனெனில் என் சகோதரர்களிடம் இருந்து நான் வித்தியாசமாக தெரிய கூடாது என்பதற்காக. நான் கல்லூரி படிக்கும் வரை என் சூர்யாவின் சட்டையையும், கார்த்தியின் ஜீன்சையும் அணிவேன். அவர்களுடன் போட்டோவில் இருப்பது நான் தான் என்பது இப்போது உங்களுக்கு புரிந்திருக்கும் என குறிப்பிட்டுள்ளார்.
கமெண்டில் கலாய்த்த கார்த்தி
இதை சூர்யா, கார்த்தி, ராதிகா உள்ளிட்ட பிரபலங்கள் லைக் செய்துள்ளனர். கார்த்தி பதிவிட்டுள்ள கமெண்டில், இதில் உன்னை விட நான் தான் இளமையாக இருக்கிறேன். அதற்கு நான் என்ன செய்ய முடியும் என கேட்டு கலாய்த்துள்ளார். பிருந்தா பகிர்ந்த இந்த போட்டோவிற்கு லைக்குகளும், கமெண்ட்களும் குவிந்து வருகிறது.