ஜெயம் ரவி உடலில் அரவிந்த்சாமி... கூடுவிட்டு கூடு பாயும் கதைதான் ’போகன்’?
ஒரு பக்கம் தொழில்நுட்பம் படு வேகமாக வளர்ந்து வருகிறது. ஆனால் தமிழ் சினிமாவோ பேய், பிசாசு என ஜகன் மோகினி காலத்துக்கே போய்விட்டது.
இதோ மீண்டும் ஒரு பழைய கான்செப்டுக்குள்தான் நுழைந்துள்ளது.

கூடுவிட்டு...
அது கூடுவிட்டு கூடு பாய்வது.
ஒருவர் உடலில் இன்னொருவரின் உயிர் நுழைந்துகொண்டு அவர் மூலமாக தன் காரியங்களை சாதித்துக்கொள்வது தான் கூடுவிட்டு கூடு பாய்வது.

சின்ன வாத்தியாருக்குப் பிறகு
கடைசியாக கமல் ஹாஸன் தயாரித்த சின்ன வாத்தியார் படத்தில் பிரபுவின் உயிர் இன்னொரு பிரபுவின் உடலில் புகுந்துகொண்டு அதகளம் பண்ணும். அதன் பிறகு தமிழ் சினிமா மறந்திருந்த இந்த கூடுவிட்டு கூடு பாயும் கதை தான் போகனின் கதையாம்.

ஹீரோ - வில்லன்
முதல் பாதியில் ஜெயம் ரவியின் உயிர் அரவிந்த்சாமியின் உடலில் புகுந்துக்கொள்ளுமாம். அதே இரண்டாம் பாதியில் அரவிந்த்சாமியின் உயிர் ஜெயம்ரவியின் உடலில் புகுந்துக் கொள்ளுமாம்.

ரகசியம்
இதில் ஜெயம் ரவி ஹீரோ, அரவிந்த்சாமி வில்லன். இந்த உண்மையைத்தான் படக்குழுவினர் ரகசியமாக வைத்திருக்கிறார்களாம்.
கேட்க நல்லாத்தான் இருக்கு...


Click it and Unblock the Notifications











