Don't Miss!
- Sports RR vs DC : 36-3.. திடீரென உள்ளே புகுந்த அஸ்வின்.. அடுத்தடுத்து பறந்த சிக்சர்கள்.. தப்பிய ராஜஸ்தான்!
- News வெளியானது டிஎன்பிஎஸ்சி குரூப் 1 ரிசல்ட்.. தேர்வு முடிவை எப்படி பார்க்கலாம் தெரியுமா?
- Automobiles உலகமே எதிர்பார்த்த சியோமி மின்சார கார் விற்பனைக்கு வந்தாச்சு! அதோட செல்போன்களை போலவே இதோட விலையும் ரொம்ப கம்மி
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Lifestyle முட்டை வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... இல்லனா பல ஆபத்துக்களை சந்திக்க வேண்டியிருக்கும்...!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
அடுத்து விமானக் கடத்தலா? ரொமான்டிக் காமெடியா? - கமல் வைக்கும் சஸ்பென்ஸ்!
கடந்த வாரம் செவாலியே விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட கம்ல்ஹாசன் கால் ஆபரேஷனில் இருந்து இப்போதுதான் தேறி வருகிறார்.
சபாஷ் நாயுடு படத்தின் வெளிநாட்டு போர்ஷன் மட்டும்தான் படமாக்கப்பட்டுள்ளது. இங்கே எடுக்கப்பட வேண்டிய காட்சிகள் பெண்டிங்கில் உள்ளன. கமல் பழையபடி படப்பிடிப்பில் கலந்துகொள்ள இன்னும் இரண்டு மாதங்கள் ஆகும் என்கிறார்கள். எனவே இந்த ஆண்டு சபாஷ் நாயுடு ரிலீஸ் ஆவது
சந்தேகம்தான். அநேகமாக பொங்கலுக்கு வெளியாகலாம்.
கமல் அடுத்து பண்ணுவதற்காக திட்டமிட்ட படம் விமான கடத்தைலை மையமாக வைத்தது. கமலின் இணை இயக்குநரும் தூங்காவனம் இயக்குநருமான ராஜேஷ்.எம்.செல்வா இயக்கத்தில் நடிப்பதாக இருந்த்து.
ஆனால் கால் ஆபரேஷன் முடிந்து ஓய்வில் இருந்தபோது கமல் மனதில் இன்னொரு ஐடியா உருவாகி இருக்கிறது. பத்து ஆண்டுகளுக்குமுன் தன் நடிப்பில், கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் வெளியான பஞ்சதந்திரம் பார்ட் 2 எடுக்கலாம் என்பதுதான் அந்த ஐடியா. யோசனை தோன்றிய உடனேயே கிரேசி மோகனையும், கே.எஸ்.ரவிகுமாரையும் வரவழைத்து பேசிவிட்டாராம். அதற்கான திரைக்கதை
எழுதும் பணி சென்றுகொண்டிருக்கிறது.
கமலின் அடுத்த படம் பஞ்சதந்திரமா இல்லை விமான கடத்தல் தொடர்பான படமா என்பதில் சஸ்பென்ஸ் நீடிக்கிறது. கமல் எடுக்கும் முடிவே இறுதியானது.