twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பொள்ளாச்சி கொடூரம்: பண்படாதவர்களின் மிருகத் தோலை உரிக்க வேண்டும்... வைரமுத்து ஆவேசம்!

    பொள்ளாச்சி கொடூரத்திற்கு காரணம் என்ன என்பதை கவிஞர் வைரமுத்து விளக்கினார்.

    |

    Recommended Video

    Lyricist Vairamuthu: பண்படாத பைத்தியங்கள் தான் பொள்ளாச்சி கொடூரத்தை செய்துள்ளன- வைரமுத்து-வீடியோ

    சென்னை: பண்படாத பைத்தியங்கள் தான் பொள்ளாச்சி கொடூரத்தை செய்துள்ளன என கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார்.

    செல்வக்கண்ணன் இயக்கத்தில் கடந்த வாரம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ள படம் நெடுநல்வாடை. இப்படத்தின் வெற்றியை படக்குழுவினர் நேற்று மாலை வெகு விமரிசையாக கொண்டாடினர்.

    இந்த விழாவில், கவிஞர் வைரமுத்து, இயக்குநர் செல்வகண்ணன், படத்தின் கதாநாயகன் அலெக்ஸ், நாயகி அஞ்சலிநாயர், ஒளிப்பதிவாளர் வினோத் ரத்தினசாமி, படத்தொகுப்பாளர் மூ.காசிவிஸ்வநாதன், இசை அமைப்பாளர் ஜோஸ் ப்ராங்க்ளின், படத்தை தமிழகமெங்கும் வெளியிட்ட எஸ்கேப் ஆர்டிஸ்ட் மதன், ஜேம்ஸ் உள்பட படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர்.

    எனக்கு நடந்தது என் குழந்தைக்கு நடக்கவே கூடாது: சமந்தா எனக்கு நடந்தது என் குழந்தைக்கு நடக்கவே கூடாது: சமந்தா

    வெள்ளை தாளாக வந்தேன்

    வெள்ளை தாளாக வந்தேன்

    விழாவில் பேசிய கவிஞர் வைரமுத்து, "சில மேடைகளுக்கு அசைபோட்டு கொண்டு வருவது உண்டு. இன்னும் சில மேடைகளுக்கு எப்படிப் பேச வேண்டும் என்று ஒத்திகை பார்த்து வருவோம். இந்த மேடைக்கு வெள்ளைத் தாளாக வந்தேன். செல்வகண்ணன் என்னை உருக்கிவிட்டார். இந்த வாழ்க்கை செல்வகண்ணன் அவர்களுக்கு மட்டும் அல்ல. எனக்கும் பொருந்தும்.

    தாத்தா பாட்டி தான் பாதுகாப்பு

    தாத்தா பாட்டி தான் பாதுகாப்பு

    ஒரு குடும்பத்தில் ஒரு இருமுகிற தாத்தா இருந்தால் எவ்வளவு நல்லது தெரியுமா? ஒரு கிழவி இருந்தால் எவ்வளவு நம்பிக்கை தெரியுமா? கிழவனும் கிழவியும் இருப்பது ஒரு குடும்பத்துக்கு எவ்வளவு பாதுகாப்பு. தம்பி செல்வகண்ணன் எனக்கு ஊதியம் தரவில்லை என்றார். "தம்பி நீ எனக்கு இந்தப்படத்தை விட பெரிய ஊதியம் தரமுடியுமா? ஒரு இயக்குநர் மேடையில் கவிஞனின் வரிகளுக்கு கண்ணீர் சிந்தி இருக்கிறான் என்றால் அதைவிட எனக்குப் பெரிய ஊதியம் ஏது?

    தமிழ் இலக்கியத்தின் தலைப்பு

    தமிழ் இலக்கியத்தின் தலைப்பு

    இந்தப்படத்தில் ஒரு நல்ல நடிகன் கிடைத்திருக்கிறான். நல்ல இசை அமைப்பாளர் கிடைத்திருக்கிறார். அதைவிட இந்த நெடுநல்வாடை படம் மூலமாக 50 தயாரிப்பாளர்கள் கிடைத்திருக்கிறார்கள். தம்பி செல்வகண்ணனுக்கு நான் இலக்கியம் சார்பாக நன்றி சொல்கிறேன். தமிழில் பெயர் வைத்தால் வரிவிலக்கு என்ற நிலையில், இரண்டாயிரம் ஆண்டுக்கு முன்பு வெளிவந்த ஒரு இலக்கியத்தின் தலைப்பை இந்த டிஜிட்டல் யுகத்தில் ஒரு இளைஞன் வைத்திருக்கிறான் என்றால் தமிழின் பெருமையைப் பாருங்கள்.

    பொள்ளாச்சி கொடூரம்

    பொள்ளாச்சி கொடூரம்

    இந்தப்பொள்ளாச்சி சம்பவம் குறித்து ஆட்சி உலகமும், சமூகமும் தவிக்கிற தவிப்பை நீங்கள் பார்க்கிறீர்கள். ஒரு பெண்ணின் கதறல் அரைத்தூக்கத்தை கெடுக்கிறது. பொள்ளாச்சியில் மட்டும் தான் இப்படியான துயரம் நடக்கிறதா?. மற்ற இடங்களிலும் இது போன்று ஏன் நடந்திருக்கக்கூடாது என்ற யோசனை பதறவைக்கிறது.

    மிருகத்தின் குழந்தை

    மிருகத்தின் குழந்தை

    இதுபோன்ற கொடுமைகள் நடக்க அடிப்படை காரணம் ஒன்று உண்டு. மனிதன் இயல்பாகவே மிருகத்தின் குழந்தை. அந்த மிருகங்களை சரிப்படுத்த தான் கலை. அந்தக்கலையால் பண்படாத பைத்தியங்கள் தான் இப்படியான செயலை செய்திருக்கிறார்கள். இந்த மனநோய்களை தயாரிப்பதில் இந்த சமூகத்துக்குரிய பங்கு என்ன? நடுத்தெருவில் நிறுத்தி தோல் உரியுங்கள் என்று சிலர் சொல்கிறார்கள். அதைவிட அவர்களின் மனதில் இருக்கும் மிருகத்தோலை உரிக்கவேண்டும்.

    பண்படுத்தும் கலை

    பண்படுத்தும் கலை

    அதைத்தான் கலை செய்கிறது. இதைத் தான் நெடுநல்வாடை செய்தது. ஒன்று சொல்லட்டுமா? இந்தப்படம் சிறந்தபடம் என்று தெரியும். ஆனால் வணிக ரீதியாக வெற்றிபெறுமா? என்ற சந்தேகம் இருந்தது. இப்போது வணிக ரீதியான வெற்றியையும் பெற்றிருக்கிறது. அதற்கு காரணம் ஊடகங்கள் தான். படத்தில் சிறப்பாக நடித்த பூ ராமுக்கு நிச்சயமாக மாநில விருதாவது கிடைக்கும் என்று நம்புகிறேன்" என்று கூறினார் வைரமுத்து.

    English summary
    While speaking in the success meet of Nedunalvadai, poet Vairamuthu wished the movie team for getting this success.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X