Don't Miss!
- Lifestyle உங்க பிறந்த தேதியை சொல்லுங்க.. வருகிற ஏப்ரல் மாசம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்...
- Automobiles சுஸுகி வி-ஸ்டார்ம் 800டிஇ பைக் இந்தியாவில் அறிமுகம்! இந்த பைக்க வாங்குற காசுல 2 மாருதி ஆல்டோ காரை வாங்கிடலாம்!
- News மீண்டும் மீண்டுமா! அரவிந்த் கெஜ்ரிவாலை பதவி நீக்கம் செய்யக்கோரி டெல்லி ஹைகோர்ட்டில் மனுத்தாக்கல்
- Finance TATA Sons நிறுவனத்தில் ஒரேயொரு பங்கு வைத்திருக்கும் மர்ம நபர்? யார் இவர்?! JRD டாடா-வுடன் நெருக்கம்!
- Sports 4,4,6.. உங்க ஸ்பின்னெல்லாம் என்னிடம் எடுபடாது.. கேகேஆர் அணியின் அஸ்திவாரத்தை ஆட்டிய கேமரூன் க்ரீன்!
- Technology கஸ்டமர்களுக்கு வந்த திடீர் மெசேஜ்! சத்தமின்றி BSNL சேவையில் புதிய மாற்றம்.. ஆப்பிற்குள் காத்திருந்த அதிர்ச்சி!
- Travel தமிழ்நாட்டிலேயே பாதுகாப்பான சுற்றுலாத் தலங்கள் இவை தான் – பெண்களாக, குடும்பங்களாக செல்ல ஏற்ற இடங்கள்!
- Education நெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பிஎச்.டி. படிப்பில் சேரலாம்: யுஜிசியின் புதிய அறிவுறுத்தல
சில்மிஷம் செய்தவன் சட்டை காலரை பிடித்து இழுத்து சப்புன்னு அறைந்த தீபிகா
Recommended Video
மும்பை: தன்னிடம் சில்மிஷம் செய்தவனை சட்டை காலரை பிடித்து கன்னத்தில் ஓங்கி அறைந்துள்ளார் நடிகை தீபிகா படுகோனே.
பாலிவுட்டின் வெற்றி நாயகியாக உள்ளார் தீபிகா படுகோனே. அவர் நடிப்பில் வெளியான பத்மாவத் படம் ஹிட்டாகியுள்ளது. படம் தொடர்பாக தீபிகாவுக்கு கொலை மிரட்டல் எல்லாம் விடுக்கப்பட்டது.
இந்நிலையில் பேட்டி ஒன்றில் தீபிகா கூறியிருப்பதாவது,
உணவகம்
எனக்கு 14 வயது இருக்கும்போது நான் என் குடும்பத்தாரோடு உணவகத்தில் சாப்பிட்டுவிட்டு சாலையோரம் நடந்து சென்றோம். அப்பாவும், தங்கையும் முன்னால் சென்றார்கள். நானும், அம்மாவும் அவர்கள் பின்னால் நடந்து சென்றோம்.
நான்
நானும், அம்மாவும் நடந்து சென்றபோது ஒருவன் வேண்டும் என்றே என்னை உரசிவிட்டு சென்றான். நான் நினைத்திருந்தால் அதை கண்டுகொள்ளாமல், அப்படி ஒரு சம்பவமே நடக்காதது போன்று இருந்திருந்திருக்கலாம்.
சில்மிஷம்
என்னிடம் சில்மிஷம் செய்தவனை பின்தொடர்ந்து சென்று அவன் சட்டை காலரை பிடித்து நடுத்தெருவில் வைத்து அவன் கன்னத்தில் ஓங்கி அறைந்துவிட்டு வந்தேன்.
நம்பிக்கை
வம்பு செய்தவனை நான் அறைந்ததை பார்த்த என் பெற்றோருக்கு இனி இவள் பிழைத்துக் கொள்வாள் என்ற நம்பிக்கை வந்தது. இனி எந்த சூழலிலும் மகள் சமாளித்துக் கொள்வாள் என்று அவர்கள் அப்போதில் இருந்து நம்பினார்கள்.
கால்
பத்மாவத் படம் தொடர்பாக என் மூக்கை வெட்டுவேன் என்று ஒரு அமைப்பு தெரிவித்துள்ளது. எனக்கு என் மூக்கு மிகவும் பிடிக்கும். என் பாதம் மிகவும் பெரிதாக உள்ளது. அதை வேண்டுமானால் அவர்கள் எடுத்துக் கொள்ளட்டும் என்று கூறி சிரித்தார் தீபிகா.