Don't Miss!
- News பொத்தென விழுந்த மேற்கூரை.. 3 பேரை அமுக்கி கொன்ற சென்னை பப் விபத்து பற்றி காவல்துறை விளக்கம்
- Automobiles உலகின் தலை சிறந்த கார் எது தெரியுமா? விருதை தட்டி சென்ற கியா தயாரிப்பு! சும்மா ஒன்னும் இதை தூக்கி கொடுத்திடல..
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Lifestyle வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
எவ்வளவோ சொல்லிப் பார்த்தும் சூர்யாவுக்கு 'நோ' சொன்ன கலாபவன் மணி
சென்னை: சூர்யாவின் எஸ்3 படத்தில் வில்லனாக நடிக்குமாறு வந்த வாய்ப்பை ஏற்க கலாபவன் மணி மறுத்தது தற்போது தெரிய வந்துள்ளது.
ஹரி இயக்கத்தில் சூர்யா நடிக்கும் சிங்கம் படத்தின் மூன்றாம் பாகமான எஸ்3ல் வில்லனாக கலாபவன் மணியை நடிக்க வைக்க முடிவு செய்திருக்கின்றனர். இதையடுத்து சூர்யா மற்றும் படக்குழுவினர் கலாபவன் மணியை அணுகி படத்தில் வில்லத்தனம் செய்ய வருமாறு அழைத்துள்ளனர்.
அதற்கு மணியோ, எனக்கும் உங்கள் படத்தில் நடிக்க ஆசை தான். ஆனால் எனக்கு உடல்நலம் சரியில்லை. அதனால் நடிக்க முடியாது என்று தெரிவித்துள்ளார். இதை கேட்ட சூர்யாவோ, பெரிய சண்டைக் காட்சிகளில் எல்லாம் நீங்கள் நடிக்க வேண்டாம் ஆனால் என் படத்தில் நீங்கள் இருக்க வேண்டும் என விரும்புகிறேன் என்று கூறியுள்ளார்.
சண்டை காட்சி என்ன சாதாரண காட்சியிலும் நடிக்க முடியாத நிலையில் உள்ளேன். என்னால் உங்கள் படத்தில் நடிக்க முடியாது என்று சூர்யாவிடம் கூறியுள்ளார் மணி. மேலும் தன்னைத் தேடி இந்த வாய்ப்பு வந்ததை யாரிடமும் கூற வேண்டாம் என்று அவர் எஸ்3 குழுவினரை கேட்டுக் கொண்டுள்ளார்.
குடிப்பழக்கத்தால் கல்லீரல் பாதிக்கப்பட்டு மரணம் அடைந்த மணியின் உடல்நலம் பற்றி மலையாள திரையுலகினர் பலருக்கும் தெரியாமல் இருந்துள்ளது. அவர் இறந்த செய்தி அறிந்த பல பிரபலங்கள் என்னது, மணி மருத்துவமனையில் இருந்தாரா எங்களுக்கு தெரியவே தெரியாதே என்று வியப்பில் ஆழ்ந்தனர்.