Don't Miss!
- Finance அதானி உடன் கைகோர்த்த அம்பானி.. வரலாற்று சம்பவம், இனி என்னவெல்லாம் நடக்குமோ..?
- Lifestyle சாணக்கிய நீதி படி ஒருவர் நூறு வயசுவரைக்கும் ஆரோக்கியமா வாழ இந்த விஷயங்களை பாலோ பண்ணுனா போதுமாம்...!
- News ரேஷனில் புதிய பொருள்.. குடும்ப அட்டைதாரர்களுக்கு குட் நியூஸ்.. தமிழக விவசாயிகளுக்கு ஹேப்பி.. சபாஷ்
- Sports முட்டாள்தனம்.. என்னையா டீமை விட்டு விரட்டி விட்டீங்க.. ஐபிஎல் அணியை கதற விட்ட ஆவேஷ் கான்
- Technology திடீரென இலவச பிரீமியம் சந்தா அறிவித்த எலான் மஸ்க்.. உற்சாகத்தில் எக்ஸ் பயனர்கள்..
- Automobiles கார் வாங்குவதிலும் ஆணுக்கு இணையாக பெண்கள்!! புள்ளி விபரம் என்ன சொல்லுது? எந்த ஊரில் அதிகம்?
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
ராத்திரியில் நிஜ பேயை துரத்திக் கொண்டு சுடுகாட்டுக்கு ஓடிய மொட்டை ராஜேந்திரன்
Recommended Video
சென்னை: பேய் படத்தில் நடித்த போது மொட்டை ராஜேந்திரன் இரவு நேரத்தில் சுடுகாட்டுக்கு ஓடிய சம்பவம் படக்குழுவை அதிர்ச்சி அடைய வைத்தது.
காமெடி கலந்த பேய் படம் மோகனா. ஆர்.ஏ. ஆனந்த் இயக்கியுள்ள இந்த படத்தில் மொட்டை ராஜேந்திரன், பவர்ஸ்டார் சீனிவாசன், கல்யாணி நாயர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
1980ம் ஆண்டு காஞ்சிபுரத்தில் உள்ள திருமால்பூர் கிராமத்தில் நடந்த பேய் சம்பவங்களை படமாக்கியுள்ளனர்.
பண்ணையார்
மோகனா படத்தில் மொட்டை ராஜேந்திரன் பண்ணையாராக நடித்துள்ளார். மேலும் பெண் விஷயத்தில் வீக்கானவராகவும் நடித்துள்ளார். கல்யாணி நாயர் பேயாக நடித்திருக்கிறார்.
சுடுகாடு
கல்யாணி நாயர் பேய் என்று தெரியாமல் அவர் மீது ஆசைப்பட்டு அவரை அடைய மொட்டை ராஜேந்திரன் துரத்தும் காட்சி உள்ளது. ராஜேந்திரன் தனது பங்களாவில் இருந்து சுடுகாடு வரை பேயை துரத்திச் சென்று கட்டிப்பிடிக்கும் காட்சியை படமாக்கினார்கள்.
பயம்
ராஜேந்திரன் பேயை துரத்திக் கொண்டு பங்களாவில் இருந்து சுடுகாடு வரை ஓடியுள்ளார். ஆனால் பேயாக நடித்த கல்யாணி நாயரோ செட்டில் இருக்க அவர் ஓடிய சம்பவம் அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்தது.
கல்யாணி நாயர்
திருமால்பூரில் இறந்த போன பெண் ஒருவரின் ஆவி கல்யாணி நாயரின் உடம்புக்குள் புகுந்து பவர்ஸ்டார் சீனிவாசனை மிரட்டியதாகவும் படக்குழு தெரிவித்துள்ளது.