Don't Miss!
- News வேலி தாண்டிய வெள்ளாடு.. கோவை லாட்ஜ் டூ திருச்சி லாட்ஜ்.. வெறும் 14 வயசு தான்.. என்ன கொடுமை இதெல்லாம்
- Lifestyle கோடை காலத்தில் முட்டை சாப்பிடலாமா? கூடாதா? நிபுணர்கள் சொல்லுவது என்ன?
- Automobiles தார் ரோடு, பாறைகள் நிறைந்த ஆஃப்-ரோடு எதா இருந்தாலும் ஒரு கை பாத்திடலாம்! இந்தியாக்கு ஏத்த கார் விராங்ளர்!
- Technology உங்க மொபைலில் கூகுள் பே, போன் பே, பேடிஎம் செயலிகள் இருக்கா? இதை கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க.. ஏன்?
- Sports தமிழக வீரரால் நடந்த மாற்றம்.. குஜராத் அணிக்கு ஆப்பு வைத்த சுப்மன் கில்.. ஆட்டத்தை மாற்றிய ஒரு முடிவு
- Finance ஆதார் அட்டை தொலைஞ்சி போயிடுச்சா.. கவலை வேண்டாம்.. இதை மட்டும் பாலோ பண்ணுங்க..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
கலாபவன் மணிக்காக மணிக் கணக்கில் காத்திருந்த ரஜினி, ஐஸ்வர்யா ராய்
சென்னை: எந்திரன் படப்பிடிப்பின்போது கலாபவன் மணிக்காக ரஜினிகாந்தும், ஐஸ்வர்யா ராயும் பல மணிநேரம் காத்திருந்துள்ளனர்.
இயக்குனர் ஷங்கர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், ஐஸ்வர்யா ராய் ஆகியோரை வைத்து எடுத்த சூப்பர் ஹிட் படம் எந்திரன். அந்த படத்தில் ஒரேயொரு காட்சியில் கலாபவன் மணி நடித்திருப்பார்.
அந்த படத்தில் நடிக்கையில் நடந்த சுவாரஸ்யமான சம்பவம் குறித்து தற்போது தகவல் கிடைத்துள்ளது.
கலாபவன் மணி
எந்திரன் படப்பிடிப்பில் கலந்து கொள்ள கேரளாவில் இருந்து கிளம்பிய கலாபவன் மணி விமானத்தை மிஸ் பண்ணிட்டார். உடனே அவர் ஷங்கருக்கு போன் செய்து தகவலை தெரிவித்தார்.
ஷங்கர்
ஷங்கர் சார் விமானத்தை தவறவிட்டுவிட்டேன். இதனால் படப்பிடிப்பு பாதிக்கப்படக் கூடாது. அதனால் எனக்கு பதில் வேறு ஒரு நடிகரை நடிக்க வையுங்கள் என்று கலாபவன் மணி தெரிவித்துள்ளார்.
வாங்க
விமானத்தை தவறவிட்டால் பரவாயில்லை. அடுத்த விமானத்தை பிடித்து வாங்க, நாங்கள் காத்திருக்கிறோம் என்று ஷங்கர் கூறியுள்ளார். திறமையான மணியை விட்டுவிட ஷங்கருக்கு மனம் இல்லை.
ரஜினி
மணி அடுத்த விமானத்தை பிடித்து சென்னை வரும் வரை ரஜினிகாந்த், ஐஸ்வர்யா ராய் ஆகியோர் மணிக் கணக்கில் காத்திருந்துள்ளனர்.