Don't Miss!
- Technology Jio-வை பொலி போட்ட BSNL.. ரூ.600 க்கு 4000GB டேட்டா.. 125 Mbps ஸ்பீட்.. இலவச OTT.. 2 புதிய திட்டங்கள் அறிமுகம்!
- News "மேட்டர் ரொம்ப சீரியஸ்!" மீண்டும் இந்தியாவை சீண்டும் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ! என்ன தான் நடக்குது
- Travel 2050 வருஷம் வருறதுக்குள்ள உலகத்துல உள்ள இந்த அழகான இடங்கள் எல்லாம் கடலுக்குள்ள போயிடுமாம்!
- Finance முதல்ல மகன், இப்போ அம்மா.. காங்கிரஸ் விட்டு விலகிய சாவித்ரி ஜிண்டால்..!!
- Automobiles மாருதியின் இந்த கார்களின் டேங்கை ஃபுல் பண்ணா 1,200கிமீ போகலாமா.. இதுக்காக பிரச்சாரம் செய்யவே தொடங்கிட்டாங்க!
- Sports SRH vs GT : பல்தான்ஸ்.. நமக்கு இவ்வளவு பெரிய சோதனை வந்தது ஏன்? ஓய்வறையில் ஓபனாக பேசிய ஹர்திக்!
- Lifestyle ஹிட்லரின் ஆட்சியில் செய்யப்பட்ட மகத்தான சாதனைகள்... ஹிட்லருக்கே தெரியாம இவ்வளவு நல்லது பண்ணிருக்காரா?
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
நடிகர் திலகம் கண்டெடுத்த விலைமதிப்பில்லாத மாணிக்கம் ஜெயலலிதா
சென்னை: 12 வயது சிறுமி ஜெயலலிதாவை பார்த்த நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர் நடிகையாக வேண்டும் என தனது விருப்பத்தை தெரிவித்தார்.
கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டத்தில் பிறந்தவர் ஜெயலலிதா. பிறந்தபோது அவருக்கு அவரது பாட்டியின் பெயரான கோமளவள்ளி என்ற பெயர் சூட்டப்பட்டது. அதன் பிறகே அவரின் பெயர் ஜெயலலிதா என மாற்றப்பட்டது.
ஜெயலலிதா சிறு வயதில் இருந்து பியானோ வாசிக்க கற்றுக் கொண்டார். மேலும் பரதம், மோகினியாட்டம், மணிபுரி மற்றும் கதக் ஆகிய நடனங்களையும் கற்றுத் தேர்ந்தார்.
ஜெயலலிதாவுக்கு 12 வயது இருக்கும்போது அதாவது 1960ம் ஆண்டு மே மாதம் மயிலாப்பூரில் உள்ள ரசிக ரஞ்சனி சபாவில் அரங்கேற்றம் செய்தார். அந்த அரங்கேற்ற நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக வந்தவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன்.
ஜெயலலிதாவின் நடனத்தை பார்த்த சிவாஜி இந்த சிறுமி நடிகையாக வேண்டும் என்று தனது விருப்பத்தை தெரிவித்தார். அவரது விருப்பம் நிறைவேறி பிற்காலத்தில் ஜெயலலிதா சிவாஜிக்கு ஜோடியாகவே நடித்தார்.