Don't Miss!
- News தென் சென்னையில் கள்ள ஓட்டு? பாஜக திமுக மாறி மாறி புகார்.. பெரும் பதற்றம்! என்ன நடக்கிறது
- Sports CSK vs LSG : தோனி பேட்டிங்.. அலறிய வாட்ச்.. பதறிய டி காக் மனைவி.. ரசிகர்கள் செயலால் நடந்த சம்பவம்
- Lifestyle 2024 குரு பெயர்ச்சியால் உருவாகும் குபேர யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு..
- Automobiles இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
சினிமாவை விட்டு ஓடணும்னு நினைத்தபோது எல்லாம்...: ஐஸ்வர்யா ராஜேஷ்
சென்னை: சினிமா துறையை விட்டு விலக வேண்டும் என்று நினைக்கும்போது எல்லாம் நல்ல கதாபாத்திரம் தேடி வந்தது என்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ்.
அட்டக்கத்தி படம் மூலம் பிரபலமானவர் தமிழ் பெண்ணான ஐஸ்வர்யா ராஜேஷ். இளம் நாயகியாக இருந்தாலும் துணிந்து வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.
காக்கா முட்டை படத்தில் இரண்டு பசங்களுக்கு அம்மாவாக நடித்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். இந்நிலையில் திரையுலக பயணம் குறித்து அவர் கூறுகையில்,
படங்கள்
நான் நடிக்கத் துவங்கியபோது நல்ல வாய்ப்புகள் கிடைக்கவில்லை. அதே நேரம் நீ எல்லாம் ஹீரோயின் மெட்டீரியலே கிடையாது, பிற ஹீரோயின்கள் போன்று நீ சிவப்பாக இல்லை என்று என்னை பார்த்து கமெண்ட் அடித்தார்கள்.
சிவப்பு இல்லை
நான் சிவப்பு இல்லை மாநிறம் தான். அதனால் வழக்கமான ஹீரோயின்கள் போன்று நான் இல்லை. மேலும் நான் தமிழ் பேசுகிறேன் அதுவும் கூட ஒரு பிரச்சனையே.
ஹீரோயின்
நான் ஹீரோயினாக செட்டாக மாட்டேன் என மக்கள் நினைக்க பல காரணம் இருந்தது. சினிமாவை சீரியஸாக எடுத்துக் கொண்டு நிரூபித்துக்காட்ட வேண்டும் என நினைத்தேன்.
சினிமா
நம்மால் சினிமாவில் தாக்குப்பிடிக்க முடியாது என்று நான் நினைத்தது உண்டு. சினிமாவை விட்டு விலக வேண்டும் என்று நினைத்தபோது எல்லாம் நல்ல பட வாய்ப்பு என்னை தேடி வந்தது என்றார் ஐஸ்வர்யா ராஜேஷ்.