பாடகி சுசித்ரா எங்கே?: பெரிய இடத்து ஆட்களால் கடத்தலா?
சென்னை: சுசிலீக்ஸ் புகழ் பாடகி சுசித்ரா இருக்கும் இடம் யாருக்கும் தெரியவில்லை. அவர் கடத்தப்பட்டிருக்கலாம் என்ற பேச்சு கிளம்பியுள்ளது.
நள்ளிரவு பார்ட்டியில் எல்லை மீறிய விளையாட்டால் பாடகி சுசித்ரா தனுஷ் ஆட்களால் காயம் அடைந்தார். காயம்பட்ட தனது கையை புகைப்படம் எடுத்து ட்விட்டரில் வெளியிட்டார்.
தனுஷையும் ட்விட்டரில் விளாசித் தள்ளினார்.

தனுஷ்
தனுஷ், அனிருத், ஆண்ட்ரியா, ஹன்சிகா, த்ரிஷா உள்ளிட்டோரின் அந்தரங்க புகைப்படங்கள் மற்றும் வீடியோவை ட்விட்டரில் வெளியிட்டார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

லீலை
லீலை தனுஷ் மற்றும் அமலா பாலின் லீலை வீடியோவை வெளியிடுவதாக அறிவித்தார் சுசி. ஆனால் அந்த வீடியோவை அவர் வெளியிடவில்லை. மேலும் தனது கணவர் கார்த்திக்கை விவாகரத்து செய்யப் போவதாகவும் ட்வீட்டினார்.

மனச்சிதைவு
சுசித்ராவின் ட்விட்டர் கணக்கு ஹேக் செய்ய்பட்டதாக கார்த்திக் தெரிவித்தார். மேலும் சுசித்ராவுக்கு மனச்சிதைவு ஏற்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார். இதற்கிடையே தன்னை கட்டாயப்படுத்தி மருத்துவமனையில் சேர்த்ததாக சுசி பேட்டியளித்தார்.

சுசித்ரா
ட்விட்டர், ஃபேஸ்புக்கில் தினமும் ஏதாவது போடும் சுசித்ராவை கடந்த ஒரு வாரத்திற்கு மேல் காணவில்லை. அவரை பத்திரிகையாளர்களாலும் தொடர்பு கொள்ள முடியவில்லை. கார்த்திக்கிற்கே சுசி எங்கிருக்கிறார் என தெரியவில்லை என்று செய்திகள் வெளியாகியுள்ளன.

கடத்தலா?
பரபரப்பு ட்வீட்டுகளால் பெரிய ஆட்கள் மூலம் சுசித்ரா கடத்தப்பட்டிருக்கலாம் என்ற பேச்சு கிளம்பியுள்ளது. கடத்தல் அல்ல மனச்சிதைவுக்காக சுசி சிகிச்சை பெற தலைமறைவாகியிருக்கலாம் என்றும் சிலர் கூறுகிறார்கள். சுசி வந்து கூறினால் தான் உண்மை தெரிய வரும்.


Click it and Unblock the Notifications











