ரஜினிக்கு மருமகனாகும் இந்த விசாகன் வணங்காமுடி யார்?
சென்னை: ரஜினிகாந்தின் மருமகனாகப் போகும் விசாகன் வணங்காமுடி யார் என்பதை தெரிந்து கொள்வோம்.
ரஜினிகாந்தின் இளைய மகள் சவுந்தர்யாவுக்கும், நடிகரும்-தொழில் அதிபருமான விசாகன் வணங்காமுடிக்கும் வரும் 11ம் தேதி மறுமணம் நடைபெற உள்ளது.
சவுந்தர்யாவை மணக்கும் விசாகன் பற்றிய விபரங்கள் இதோ.

மருந்து நிறுவனம்
தொழில் அதிபர் சூளூர் வணங்காமுடியின் மகனான விசாகன் மருந்து தயாரிப்பு நிறுவனமான அபெக்ஸ் லபாரடரீஸ் பிரைவேட் லிமிடெட்டின் எக்சிகியூட்டிவ் டைரக்டராக உள்ளார். புதுப் புது தயாரிப்புகளை அறிமுகப்படுத்துவதில் அதிக ஆர்வமாக உள்ளார் அவர்.

படிப்பு
விசாகன் இங்கிலாந்தில் உள்ள பிராட்போர்டு பல்கலைக்கழகத்தில் பி.பி.ஏ. படித்து முடித்துவிட்டு லண்டன் பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ. படித்தார். படிப்பு முடிந்த பிறகு சென்னை திரும்பிய அவர் தந்தையுடன் சேர்ந்து அபெக்ஸ் நிறுவனத்தை நடத்தி வருகிறார்.

ஆர்வம்
ரூ. 600 கோடி மதிப்புள்ள அபெக்ஸ் நிறுவனத்தை நடத்தி வரும் விசாகனுக்கு நடிப்பில் ஆர்வம் உண்டு. அதனால் தான் வஞ்சகர் உலகம் படத்தில் நடித்தார். இந்நிலையில் சினிமாவுடன் தொடர்புடைய சவுந்தர்யாவை திருமணம் செய்கிறார்.

முதல் மனைவி
விசாகனுக்கும், பத்திரிகை துறையை சேர்ந்த கனிகா குமரனுக்கு திருமணம் நடந்து விவாகரத்தில் முடிந்தது. கனிகா மறுமணம் செய்த நிலையில் விசாகன் சவுந்தர்யாவை மறுமணம் செய்ய உள்ளார். கனிகா குமரன் சினிமா தயாரிப்பாளரான வருண் மணியனை திருமணம் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











