Don't Miss!
- News தென் சென்னையில் கள்ள ஓட்டு? பாஜக திமுக மாறி மாறி புகார்.. பெரும் பதற்றம்! என்ன நடக்கிறது
- Sports CSK vs LSG : தோனி பேட்டிங்.. அலறிய வாட்ச்.. பதறிய டி காக் மனைவி.. ரசிகர்கள் செயலால் நடந்த சம்பவம்
- Lifestyle 2024 குரு பெயர்ச்சியால் உருவாகும் குபேர யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு..
- Automobiles இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
யார் அந்த கருப்பு ஆடு? சத்தியம் வாங்கியும் கண்டுபிடிக்க முடியலையே.. பிக்பாஸ் தேர்தல் களேபரம்!
சென்னை: பிக்பாஸ் வீட்டில் நடந்த தேர்தலில் எதிர்க்கட்சிக்கு மாற்றி ஓட்டு போட்ட நபரை கண்டு பிடிக்க முடியாமல் குழம்பினர் ஹவுஸ்மேட்ஸ்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வார லக்ஸரி பட்ஜெட் டாஸ்க்காக அரசியல் டாஸ்க் கொடுக்கப்பட்டது. இதில் ஹவுஸ் மேட்டுகள் 4, 4 பேராக மூன்று கட்சிகளாக பிரிந்தனர்.
சஞ்சீவ், பிரியங்கா மற்றும் சிபி ஆகியோர் தங்களின் கட்சிகளுக்கு தலைவராக இருந்தனர். இதில் சஞ்சீவின் கட்சியும் சிபியின் கட்சியும் கூட்டணி அமைத்து தேர்தல் பிரச்சராத்தில் ஈடுபட்டுவந்தது.
பெரிய டிவிஸ்ட்டா இருக்கே... இந்த வாரம் டேஞ்சர் ஸோனில் உள்ள பிக்பாஸ் போட்டியாளர் இவர்தான்!
என்கேஎம்பி கட்சி வெற்றி
இந்நிலையில் நேற்றைய எபிசோடில் பிக்பாஸ் வீட்டில் வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் கூட்டணி கட்சிகளான என்கேஎம்பி கட்சி 7 வாக்குகளையும் பிரியங்காவின் உரக்க சொல் கட்சி 5 வாக்குகளையும் பெற்றது. இதன்மூலம் இரண்டு வாக்குகள் வித்தியாசத்தில் என்கேஎம்பி கட்சி வெற்றி பெற்றது.
அந்த ஒரு ஓட்டு யாருடையது?
இரண்டு கட்சிகளும் கூட்டணி வைத்ததால் ஒரே தலைவராக இமான் அண்ணாச்சி தேர்வு செய்யப்பட்டார். இதனை தொடர்ந்து பிரியங்காவின் உரக்க சொல் கட்சிக்கு போடப்பட்ட அந்த ஒரு வாக்கு யாருடையது என தீவிர விவாதத்தில் ஈடுபட்டனர் ஹவுஸ்மேட்ஸ்.
உலக உருண்டையின் மீது சத்தியம்
கூட்டணிக்குள் இருந்தே ஓட்டை மாற்றிப்போட்ட அந்த கருப்பு ஆடு யார் என்று கண்டுபிடிக்கும் பணியிலும் இறங்கினர் ஹவுஸ்மேட்ஸ். இதற்காக உலக உருண்டையின் மீது கை வைத்து ஹவுஸ்மேட்ஸிடம் சத்தியம் வாங்கினர். எல்லோரும் சத்தியம் செய்ததால் கடைசி வரை யார் ஓட்டை மாற்றி எதிர்க்கட்சிக்கு போட்டார்கள் என்ற உண்மை வெளியாகவில்லை.
கடைசி வரை தெரியவில்லை
இருப்பினும் ராஜுதான் ஓட்டை மாற்றி போட்டிருப்பார் என சந்தேகித்தனர் ஹவுஸ்மேட்ஸ். ஆனால் டைனிங் ஏரியாவில் அமர்ந்து பேசிய ராஜு, யார் அப்படி செய்தது என சஞ்சீவ்வுடன் சீரியஸாக டிஸ்கஸ் செய்ததால் அவர் தானா என்ற குழப்பமும் ஏற்பட்டது. இதனால் யார் ஓட்டை மாற்றி போட்டார்கள் என்ற உண்மை கடைசி வரை தெரியவில்லை.