Don't Miss!
- News நடுவானில் பெங்களூர் விமானத்தை நெருங்கிய எமிரேட்ஸ் விமானம்.. மிக பெரிய விபத்து தவிர்ப்பு! பகீர்
- Automobiles ரெனால்ட் டஸ்டர் கார் பற்றி இந்த அப்டேட்காக தான் இந்தியாவே வெயிட்டிங்! இப்பவே ரெடியாக வேண்டியது தான்!
- Finance தங்கம் விலை மீண்டும் உயர்வு.. இனி இதுதான் நிரந்தரமா? சாமானிய மக்களால் தங்கத்தை வாங்கவே முடியாதா..?
- Sports IPL 2024 : ஐயயோ.. அவ்வளவு கண்டிப்புடன் இருக்க மாட்டேன்.. என்னை மாதிரி தான் ருதுராஜும்.. தோனி பகிர்வு
- Lifestyle ஹிட்லரின் ஆட்சியில் செய்யப்பட்ட மகத்தான சாதனைகள்... ஹிட்லருக்கே தெரியாம இவ்வளவு நல்லது பண்ணிருக்காரா?
- Technology மீண்டும் மீண்டுமா.. 50MP கேமரா.. 100W சார்ஜிங்.. புதிய போனை கொண்டுவரும் OnePlus.. எந்த மாடல்?
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
- Travel புதுச்சேரியில இப்படி ஒரு விஷயமா – ஒரே படகு சவாரியில 8 விதமான கடற்கரைகளுக்கு க்ரூஸ் சுற்றுலா!
விஜய் 60... யாருங்க டைரக்டரு?
விஜய்யின் புலி வெளியாகிவிட்டது. அந்தப் படத்தால் விஜய்க்குக் கிடைத்த ஒரே நன்மை அவரது படங்களின் எண்ணிக்கையில் ஒன்று கூடியது மட்டும்தான். இதுவரை அவர் கனவிலும் நினைத்துப் பார்த்திராத தோல்வியைத் தந்த படம் என்ற பெயரைப் பெற்றுவிட்டது அந்தப் படம்.
அடுத்து வரவிருப்பது அட்லீ இயக்கும் படம். சத்திரியன் படத்தின் ரீமேக் என்கிறார்கள். இந்தப் படமாவது புலியின் சோகத்தைத் துடைக்கக் கூடியதாக வருமா பார்க்கலாம்.
அட்லீ படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாகப் போய்க் கொண்டிருக்கிறது.
இந்தப்படத்தைத் தொடர்ந்து அவர் ஏ.எம்.ரத்னம் தயாரிப்பில் ஒரு படத்தில் நடிக்கவிருக்கிறார் என்கிறது உறுதிப்படுத்தப்படாத ஒரு செய்தி.
இந்தப் படத்தை இயக்குவது எஸ்.ஜே.சூர்யா என்று சிலர் சொல்கிறார்கள். எஸ்.ஜே.சூர்யாவிடம் கேட்டால், 'இப்போதைக்கு இதுபற்றி நான் எதுவும் சொல்லமுடியாது' என மையமாகச் சிரிக்கிறார்!
விசாரித்தால், விஜய்யின் அடுத்த படத்தை இயக்க ஒரேநேரத்தில் நான்கு இயக்குநர்களிடம் பேசிக்கொண்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது. அவர்களில் எஸ்.ஜே.சூர்யாவும் இருக்கிறார்.
மீதி மூன்றுபேர்? முருகதாஸ், வெங்கட்பிரபு மற்றும் விஜய் மில்டன் ஆகியோராம்.
முருகதாஸ், தமிழ்,தெலுங்கில் மகேஷ்பாபுவை வைத்து இயக்கும் படம் உறுதியாகிவிட்டது. அதற்கு எப்படியும் ஒரு முழு ஆண்டை அவர் எடுத்துக் கொள்வார்.
மற்ற மூவரும் அடுத்த படத்துக்குத் தயாராக இருப்பவர்கள் என்பதால் இம்மூவரில் யாராவது ஒருவர்தான் விஜய் படத்தை இயக்கக்கூடும் என்கிறார்கள்.
இடையில் பிரபு தேவாவும் விஜய்யும் சந்தித்துப் பேசியதாகக் கூறப்படுகிறது. விஜய் மார்க்கெட் டல்லடித்தபோது, புயலாய் வந்த போக்கிரிதான் தூக்கி நிறுத்தியது நினைவிருக்கலாம்.