Don't Miss!
- Sports ஹர்திக் பாண்டியாவுக்கு எச்சரிக்கை தந்த அம்பானி குடும்பம்.. மும்பை வெல்லவில்லை என்றால் கிளம்பிவிடு!
- Finance சூர்யா – தேவா: கௌதம் அதானி வெற்றிக்கு காரணமான மலாய் மகாதேவியா.. உயிர் நண்பன்..!
- Technology கம்பெனிக்கு கட்டுமா பாஸ்.. ரூ.10,999 போதும்.. 108MP கேமரா.. 8GB ரேம்.. புதிய itel போன் அறிமுகம்.. எந்த மாடல்?
- Automobiles 21 வயசு பொண்ணுக்கு இப்படி ஒரு காரானு எல்லாரையும் புலம்ப வச்சுட்டாரு அவரோட அப்பா! பலரோட கனவு காருங்க இது!
- Lifestyle Today Rasi Palan 24 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் பிறர் பிரச்சனைகளில் தலையிடாமல் இருந்தால் நல்லது...
- News நேரு பேரனா ராகுல் காந்தி? எனக்கு சந்தேகம் இருக்கு.. டிஎன்ஏ டெஸ்ட் செய்யணும்.. கேரள எம்எல்ஏ சர்ச்சை
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
இந்த வாரம் பிக் பாஸ் வீட்டிலிருந்து அதிகாரப்பூர்வமாக வெளியேறியது இவர் தான்.. என்ன காரணம்?
சென்னை: இந்த வாரம் பிக் பாஸ் வீட்டிலிருந்து அனிதா சம்பத் அதிகாரப்பூர்வமாக வெளியேறியுள்ளார்.
சனிக்கிழமையே அனிதா சம்பத் தான் வெளியேறிவிட்டார் என்பது கசிந்து விட்ட நிலையில், ஞாயிற்றுக் கிழமை நிகழ்ச்சியில் அவர் எப்படி வெளியேறினார்.
ஹவுஸ்மேட்களிடம் என்ன பேசினார் என்பதை பார்க்க ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் நிகழ்ச்சியை பார்த்தது குறிப்பிடத்தக்கது.
அனிதா சம்பத் வெளியேற்றம்
பிக் பாஸ் நிகழ்ச்சியில் 84 நாட்கள் போட்டியாளராக பங்குபெற்ற அனிதா சம்பத் இந்த வாரம் பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறி உள்ளார். இந்த முறையும், கடைசியில் ஆஜீத்தா, அனிதாவா என்ற கடைசி நேர பதற்றம் சமூக வலைதளங்களில் கசிந்த உண்மையை தெரியாமல் பார்க்கும் ஏகப்பட்ட டிவி ரசிகர்களுக்கு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
அனிதாவின் ஆருடம்
வார வாரம் யார் வெளியே போகிறார்களோ அவர்கள் திட்டவட்டமாக தாங்கள் தான் வெளியேற போகிறோம் என்பதை கமல் சொல்வதற்கு முன்பாகவே அறிவித்து விடுகின்றனர். இந்த வாரமும் அனிதா சம்பத், சார் நான் தான் சார் என ஜெயம் ரவி ஷிவானியையும், கேபியையும் சேவ் செய்வதற்கு முன்பே சொல்லி விட்டார்.
ஆஜீத்துக்கு வேற கவலை
பிக் பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் வெளியேறுவோம் என்கிற கவலை கேபி, ஷிவானி மற்றும் ஆஜீத்தின் முகங்களில் துளி கூட இல்லை. இதன்மூலம் அவர்களுக்கு ஏற்கனவே ரிசல்ட் சொல்லப்பட்டு விடுமா? என்கிற சந்தேகமும் எழத்தான் செய்கிறது. அனிதாவா? ஆஜீத்தா? என இருக்கும் போது கூட ஆஜீத் தான் ஏன் கடைசியில் சேவ் ஆகிறேன் என்கிற கவலையை மட்டுமே கொண்டிருப்பது செம காமெடி.
என்ன காரணம்
அனிதா சம்பத் இந்த வாரம் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற என்ன காரணம் என சமூக வலைதளத்தில் விவாதித்து வருகின்றனர். ஆரியை எதிர்த்து அனிதா சம்பத் நாக்கைத் துருத்தி பேசியது தான் காரணம் என கமல் சொல்லாமல் சொல்லி விட்டார். ஆரி ஆர்மியினர் இந்த முறையும் அனிதாவை வெளியேற்ற ஆஜீத்துக்கும் ஷிவானிக்கும் ஓட்டுப் போட்டு விட்டனர் என்கிற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.
விஜய் டிவி இல்லை
மேலும், அனிதா சம்பத் விஜய் டிவியின் செல்லப்பிள்ளை இல்லை என்றும், அதனால் தான் இந்த வாரம் அனிதா சம்பத் வெளியேற்றப்பட்டார். இன்னமும் விஜய் டிவியின் செல்லப்பிள்ளைகள் மொத்தமும் பிக் பாஸ் நிகழ்ச்சியில், பட்டா போட்டு உட்கார்ந்து கொண்டு இருக்கின்றனர் என்றும் நெட்டிசன்கள் கழுவி ஊற்றி வருகின்றனர். எப்படி இருந்தாலும் அனிதா தனது கணவருடன் இந்த புத்தாண்டை கொண்டாடப் போவது சந்தோஷமான விஷயம் தான்!