Don't Miss!
- News "ஒழுங்கா சொத்தை பிரிச்சு கொடு.." தந்தையை மிக கொடூரமாக தாக்கிய மகன்.. பதைபதைக்க வைக்கும் சம்பவம்
- Automobiles டிவிஎஸ் அப்பாச்சி பைக்குகள் ஓரங்கட்ட படுகிறதா? சேல்ஸ் குறைஞ்சிக்கிட்டே வருது... பஜாஜ் ஹாப்பி!!
- Sports வாழ்க்கைன்னா ஒரு சில அடிகள் விழத்தான் செய்யும்.. எல்லா போட்டியிலும் வெல்ல முடியாது.. பாட் கம்மின்ஸ்
- Lifestyle 100 ஆண்டுகளுக்கு பின் உருவாகியுள்ள திரிகிரக யோகம்: அடுத்த 5 நாட்கள் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்..
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
சிவகார்த்திகேயன், அனிருத் மீது தனுஷுக்கு கோபம் வந்தது இதனால் தான்: ஃபளாஷ்பேக் கதை தெரியுமா?
சென்னை: தமிழில் முன்னணி நடிகரான தனுஷ், திறமையான பலருக்கு அவரது படங்களில் வாய்ப்புகள் கொடுத்து வருகிறார்.
அனிருத், சிவகார்த்திகேயன் இருவரது ஆரம்ப காலங்களில் தனுஷ் அவர்களுக்கு தொடர்ந்து வாய்ப்பு வழங்கினார்.
அனிருத், சிவகார்த்திகேயன் இருவரிடமும் தனுஷ் ஒருமுறை கோபம் கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
Eeramana rojave 2:உயிருக்குப் போராடும் காவியாவின் கணவர்..அடுத்து என்னவாகும் இன்றைய எபிசோடு!
தனுஷின் அபார வளர்ச்சி
'துள்ளுவதோ இளமை' படத்தில் தனுஷ் அறிமுகமான போது, அவர் மீது பலருக்கும் பெரிதாக நம்பிக்கை இல்லை எனலாம். 'காதல் கொண்டேன்', 'புதுப்பேட்டை', 'அது ஒரு கனா காலம்', 'பொல்லாதவன்' ஆகிய திரைப்படங்கள் தான், தனுஷின் திறமையை வெளிக்காட்டின. அதேநேரம், ஐஸ்வர்யாவை திருமணம் செய்துகொண்ட பின்னர், சூப்பர் ஸ்டார் ரஜினியின் மருமகன் என்ற அடையாளமும், தனுஷின் வளர்ச்சிக்கு காரணம் என, விமர்சகர்கள் கூறினர்.
புதியவர்களுக்கு வாய்ப்பு
கோலிவுட்டில் முன்னணி நடிகராக வலம் வரத் தொடங்கியதும், புதியவர்களுக்கும் தனது படங்களில் வாய்ப்புகள் வழங்கினார் தனுஷ். அவரது நடிப்பில் ஐஸ்வர்யா இயக்கிய '3' படத்தில் அனிருத் இசையமைப்பாளராக அறிமுகமானார். அதேபோல், சிவகார்த்திகேயனும் காமெடி கேரக்டரில் நடித்திருந்தார். பின்னர் சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடித்த 'எதிர் நீச்சல்' படத்தை தயாரித்த தனுஷ், அதில் அனிருத்துக்கும் சான்ஸ் கொடுத்தார்.
பருந்தான ஊர் குருவிகள்
தமிழ் சினிமாவில் தங்களுக்கான தனித்துவமான அடையாளத்துக்காக காத்திருந்த சிவகார்த்திகேயனும் அனிருத்தும், அப்படியே படிப்படியாக முன்னேறினர். அப்போதும் கூட, தனுஷ், சிவகார்த்திகேயன், அனிருத் மூவரும் நெருங்கிய நண்பர்களாகவே வலம்வந்தனர். ஒருகட்டத்தில் அனிருத்தும் சிவகார்த்திகேயனும் புகழின் உச்சத்துக்கே சென்றனர், ஹிட் மேல் ஹிட் கொடுத்து கோலிவுட் ரசிகர்களை மெர்சலாக்கினர். அதேபோல் தனுஷும் தனது கேரியரில் உச்சம் தொட்டார்.
இதுதான் காரணமா?
இந்நிலையில், சிவகார்த்தியன் நடிப்பில் புதிய படத்தை தயாரிக்க தனுஷ் விரும்பியதாகத் தெரிகிறது. இதற்காக அவரிடம் போன தனுஷ் கால்ஷீட் கேட்டுள்ளாராம். அதற்கு அவர் எனக்கு இத்தனை கோடிகள் சம்பளம் வேண்டும் என கேட்டதாகக் கூறப்படுகிறது. இதேமாதிரியே அனிருத்திடமும் தனுஷ் கால்ஷீட் கேட்க, அவரும் கோடிகளில் சம்பளம் கேட்டுள்ளார்.
இதனால் தான் தனுஷுக்கு கோபம்
இதனால் நடிகர் தனுஷ் அனிருத், சிவகார்த்தியன் இருவர் மீதும் கோபம் கொண்டதாகக் கூறப்படுகிறது. நான் அறிமுகப்படுத்தி இந்தளவுக்கு வந்த அனிருத், சிவாகார்த்திகேயன், இப்போது என்னிடமே அதிக சம்பளம் கேட்பதா? என தனுஷ் அவர்களிடம் பேசாமல் இருந்ததாக சொல்லப்படுகிறது. ஆனாலும், நீண்ட வருடங்களுக்குப் பிறகு 'திருச்சிற்றம்பலம்' படத்திற்காக அனிருத்துடன் இணைந்துள்ளார் தனுஷ்.