Don't Miss!
- Sports
அடி தூள்.. ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடர்.. இந்தியாவுக்காக பிசிசிஐ செய்த ஸ்பெஷல் ஏற்பாடு.. வீரர்கள் குஷி!
- Finance
பொருளாதார ஆய்வறிக்கை வெளியானது.. இந்திய பொருளாதாரம் 6-6.8% வளர்ச்சி அடையும்,..!
- News
பத்திக்கிருச்சே.. இதுக்குன்னே தனி வீடு.. ராகினியிடம் கெஞ்சிய குடும்பம்.. பரிதாப கணவன்.. அலறிய ஆவடி
- Lifestyle
இந்த 4 அறிகுறிகள் உங்களுக்கு இருந்தா? இரத்த சர்க்கரையால் தீவிரமான நரம்பு பாதிப்பு ஏற்பட வாய்ப்பிருக்காம்!
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Automobiles
கார் பைக்குகளில் இருப்பது போல ரயில் இன்ஜின்களிலும் கியர் இருக்குமா? இது எப்படிப் பயன்படுகிறது?
- Technology
ஒட்டுமொத்த பட்ஜெட் போன்களையும் பேக்கில் ஓடவிடப்போகும் OnePlus Nord 3.! இது தான் காரணமா?
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
சிவகார்த்திகேயன் அழுததற்கு காரணம் என்ன?: சொல்கிறார் வினியோகஸ்தர் சுப்பிரமணியம்
சென்னை: ரெமோ சக்சஸ் மீட்டில் சிவகார்த்திகேயன் அழுதது குறித்து பட வினியோகஸ்தர் திருப்பூர் சுப்பிரமணியம் விளக்கம் அளித்துள்ளார்.
சென்னையில் நடந்த ரெமோ சக்சஸ் மீட்டில் கலந்து கொண்ட சிவகார்த்திகேயன் தன்னை சிலர் மிரட்டுவதாகக் கூறி அழுதுவிட்டார். எங்களை நிம்மதியாக வேலை செய்யவிடுங்கள் என்று கேட்டுக் கொண்டார்.
சிவகார்த்திகேயன் மேடையில் அழுதது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இது குறித்து ரெமோ வினியோகஸ்தர் திருப்பூர் சுப்பிரமணியம் கூறுகையில்,

ரெமோ
ரஜினிகாந்தின் சிவாஜி படத்திற்கு பிறகு நான் வாங்கி வெளியிட்டுள்ள படம் ரெமோ. வினியோகஸ்தர்கள் தான் தயாரிப்பாளர்களை தேடிச் சென்று படங்களை வெளியிடுவோம். ஆனால் ரெமோ தயாரிப்பாளர் ராஜாவோ என்னை தேடி வந்து படத்தை வாங்கிக் கொள்ளுமாறு கூறினார்.

ராஜா
நான் படங்களை வாங்கி வெளியிடும் வேலையை நிறுத்திவிட்டேன் என்று கூறியும் ராஜா கேட்கவில்லை. அனுபவம் உள்ள நீங்கள் தான் ரெமோவை வாங்க வேண்டும் என்று கூறி விற்றுவிட்டார்.

லாபம்
ரெமோ படத்தை தமிழகம் முழுவதும் ரூ.30 கோடிக்கு வியாபாரம் செய்துள்ளனர். அதில் வினியோகஸ்தர்களுக்கு ரூ.10 கோடி லாபம் கிடைப்பது உறுதி.

சிவகார்த்திகேயன்
ரெமோ சக்சஸ் மீட்டில் சிவகார்த்திகேயன் அழுதது குறித்து அறிந்து அவருக்கு போன் செய்து பேசினேன். 'வேந்தர் பிலிம்ஸ்' மதனும், 'எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட்ஸ்' மதனும் சிவா புதுப்படத்தில் நடிக்க முன்பணம் கொடுத்துள்ளதாக கூறுகிறார்கள்.

மன உளைச்சல்
எந்த மதனிடம் இருந்தும் முன்பணம் வாங்கவில்லை என்கிறார் சிவா. இரு தரப்பையும் நேரில் அழைத்து பேசினால் தான் உண்மை நிலவரம் தெரியும். இந்த மன உளைச்சலில் இருந்ததால் தான் சிவா மேடையில் அழுதுள்ளார்.