வெறும் வாயை மெல்லுபவர்களுக்கு அவல் கொடுப்பதா?: யோசனையில் அனுஷ்கா
ஹைதராபாத்: சும்மாவே காதல் என்று பேசுறாங்க இதில் மீண்டும் பிரபாஸுடன் சேர்ந்து நடித்தால் அவ்வளவு தான் என்று யோசிக்கிறாரம் அனுஷ்கா.
பாகுபலி படத்தில் நடித்தபோது பிரபாஸுக்கும், அனுஷ்காவுக்கும் இடையே காதல் ஏற்பட்டதாக பேச்சாகக் கிடக்கிறது. இதை சம்பந்தப்பட்டவர்கள் கண்டுகொள்ளாத போதிலும் பேச்சு மட்டும் அடங்கவில்லை.
வதந்தி பரப்பினால் சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன் என்று அனுஷ்கா தெரிவித்தும் யாரும் கேட்கவில்லை.

சாஹோ
சாஹோ படத்தில் தனது ஜோடியாக அனுஷ்காவை நடிக்க வைக்குமாறு பிரபாஸ் பரிந்துரைத்துள்ளார். அனுஷ்காவோ பிரபாஸுடன் மீண்டும் ஜோடி சேர ரொம்பவே யோசிக்கிறாராம்.

அனுஷ்கா
சும்மாவே காதல் கிசுகிசு பரப்புகிறார்கள் இந்நிலையில் மீண்டும் பிரபாஸுடன் ஜோடி சேர்ந்தால் உறுதி செய்துவிடுவார்கள் என்று நினைத்து சாஹோ படத்தில் நடிக்க தயங்குகிறாராம் அனுஷ்கா.

திருமணம்
திருமண தடை நீங்க வேண்டி அனுஷ்கா தனது குடும்பத்தாருடன் கோவில், கோவிலாக சென்று வருகிறார். இந்த நேரத்தில் அவர் எந்த பிரச்சனையிலும் சிக்க விரும்பவில்லை.

படம்
அனுஷ்கா தன்னை தேடி வரும் படங்கள் அனைத்தையும் ஏற்றுக் கொள்வது இல்லை. ஒவ்வொரு படத்தையும் ரொம்ப யோசித்து தான் தேர்வு செய்வார் என்று அவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











