நயன்தாராவால் கடுப்பின் உச்சத்தில் இருக்கும் அதர்வா
சென்னை: தன் படம் நயன்தாரா படமாக மாறியதால் அதர்வா கடுப்பில் உள்ளாராம்.
டிமாண்டி காலனி படம் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்ற நேரத்தில் அந்த பட இயக்குநர் அஜய் ஞானமுத்துவை அழைத்து கதை கேட்டவர் அதர்வா. அஜய் கூறிய கதை பிடித்துப் போக சார் நாம் தான் இந்த படத்தை பண்ணுகிறோம் என்று கூறினார்.

படத்தில் துப்பறியும் போலீஸ் கதாபாத்திரம் வெயிட்டான கதாபாத்திரம். அந்த கதாபாத்திரத்திற்கு பல முன்னணி நடிகர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய அஜய் இறுதியில் நயன்தாராவை ஒப்பந்தம் செய்துள்ளார்.

நயன்தாராவை ஒப்பந்தம் செய்த பிறகு அதர்வாவின் படம் என்பதற்கு பதிலாக நயன்தாரா படம் என்று கூறப்படுகிறது. இதை கேட்டு ஹீரோவான அதர்வா கடுப்பில் உள்ளாராம்.
ஹீரோ நானு, ஆனால் படம் நயன்தாரா படமா நல்லா இருக்கிறது என்கிறாராம்.


Click it and Unblock the Notifications











