நடிகை காவ்யாவை ஏன் இன்னும் கைது செய்யவில்லை?: தயாரிப்பாளர் கேள்வி
கொச்சி: நடிகை காவ்யா மாதவனை கைது செய்யாமல் போலீசார் ஏன் தாமதம் செய்கிறார்கள் என்று மலையாள தயாரிப்பாளர் லிபர்ட்டி பஷீர் கேள்வி எழுப்பியுள்ளார்.
மலையாள நடிகை கடத்தப்பட்டு மானபங்கப்படுத்தப்பட்ட வழக்கில் கேரள போலீசார் நடிகை காவ்யா மாதவன் மற்றும் அவரது தாயிடம் விசாரணை நடத்தினார்கள். இந்நிலையில் தனக்கு உத்தரவிட்டு வந்த மேடம் காவ்யா மாதவன் என்று நடிகை கடத்தல் வழக்கின் முக்கிய குற்றவாளியான பல்சர் சுனி தெரிவித்துள்ளார்.

இது குறித்து மலையாள திரைப்பட தயாரிப்பாளர் லிபர்ட்டி பஷீர் மலையாள மீடியாவுக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது,
காவ்யா மாதவனை ஏன் இன்னும் கைது செய்யவில்லை? போலீசார் அவர் மீது இரக்கம் காட்டுவது ஏன்? ஆதாரங்கள் இருந்தும் அவர் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?

காவ்யாவுக்கு பல்சர் சுனியை நன்கு தெரியும் என்பது ஆரம்பத்திலேயே தெளிவாகிவிட்டது. திலீப் கைதானதற்கு நான் தான் காரணம் என்று அனைவரும் நினைக்கிறார்கல். போலீசார் தான் இந்த வழக்கை விசாரித்து வருகிறார்கள் என்றார்.


Click it and Unblock the Notifications











