Don't Miss!
- Automobiles உலகின் தலை சிறந்த கார் எது தெரியுமா? விருதை தட்டி சென்ற கியா தயாரிப்பு! சும்மா ஒன்னும் இதை தூக்கி கொடுத்திடல..
- News வாரிசு அரசியலால் ஈரோடு மதிமுக எம்பி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.. ஸ்டாலின், வைகோவை சாடிய தமிழிசை
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Lifestyle வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
NGK: என்ஜிகே தாமதமானதற்கு காரணம் என்ன?... இசை வெளியீட்டு விழாவில் சூர்யா விளக்கம்!
பல்வேறு காரணங்களால் என்ஜிகே படம் காலதாமதம் ஆனதாக நடிகர் சூர்யா கூறினார்.
Recommended Video
சென்னை: என்ஜிகே படம் காலதாமதம் ஆனதற்கு காரணம் என்ன என்பது குறித்து நடிகர் சூர்யா விளக்கம் அளித்தார்.
செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் என்ஜிகே படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடிக்கிறார். முக்கியமான கதாபாத்திரத்தில் ரகுல் ப்ரீத்சிங் நடிக்கிறார்.
இப்படத்தின் பாடல் மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று மாலை நடைபெற்றது. இதில், நடிகர் சிவக்குமார் கலந்து கொண்டு படக்குழுவினரை வாழ்த்தினார்.
விழாவில் பேசிய சூர்யா, என்ஜிகே படம் தாமதமானதற்கு காரணம் என்ன என்பது குறித்து விளக்கமளித்தார்.
ரூ. 1.7 லட்சத்திற்கு கவுன் அணிந்த நடிகை: அந்த பணம் இருந்தா நீங்க என்ன செய்வீங்க?
அரசியலும் யுத்தமும்
"அரசியல் ஒரு ரத்தம் சிந்தாத யுத்தம், யுத்தம் ஒரு ரத்தம் சிந்தும் அரசியல். என்ஜிகே ஒரு சாதாரண அரசியல் திரில்லர் படமாக இருக்காது. இதில் செல்வராகவனின் அரசியல் பற்றிய பார்வை இருக்கும். இளைஞர்களுக்கு உத்வேகம் அளிக்கக் கூடிய படமாக இருக்கும்.
முதல் சந்திப்பு
செல்வராகவனை நான் முதன் முதலில் சந்தித்தது 2002ம் ஆண்டு. காதல் கொண்டேன் படத்தின் பாடல் காட்சியை பார்ப்பதற்காக எனக்கு அழைப்பு வந்தது. இரவு நேரம் சாரல் மழை பெய்த வேளையில், மின்சாரமும் இல்லாத சமயத்தில் அந்த எடிட்டிங் ரூமுக்கு சென்றேன்.
நிறைவேறிய ஆசை
கரண்ட் வந்தவுடன் பாடலை பார்த்தேன். பின்னர் வெளியே வந்த போது மீண்டும் கரண்ட் போய்விட்டது. அந்த இருளில் பேசிக்கொண்டிருந்தது எனது நினைவில் இன்னும் இருக்கிறது. யோவ் உன் கூட ஒருநாள் படம் பண்ணணும்யா என அப்போது கூறினேன். 17 ஆண்டுகள் கழித்து அந்த ஆசை நெனவாகியுள்ளது.
செல்வராகவன் மீதான காதல்
செல்வராகவன் இயக்கத்திலும், எழுத்திலும் எனக்கு தீராத காதல் உண்டு. செல்வாவின் இயக்கத்தில் ஆத்மார்த்தமாக நடித்திருக்கிறேன். மீண்டும் அவரது இயக்கத்தில் நடிக்க ஆசைப்படுகிறேன்.
யுவனின் இசை
யுவனின் இசையைப் பார்க்கும் போது எனக்கு ஆச்சரியமாக இருக்கும். அவருடைய இசை காலத்தைக் கடந்து நிற்கும் என்பதில் ஐயமில்லை. காரில் பயணம் செய்யும் போது அவரின் பாடல் கேட்டு போனில் தொடர்புகொண்டு உன் கையைக் காட்டு முத்தமிடுகிறேன் என்று கூறியிருக்கிறேன். செல்வராகவன் மற்றும் யுவன் கூட்டணி அன்யோன்மான கணவன் மனைவி போல இருக்கும்.
காலதாமதம் ஏன்?
இந்த படம் காலதாமதம் ஆனதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. எனக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இயக்குனருக்கும் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் மற்ற நடிகர்களின் கால்ஷீட் பிரச்சினை ஏற்பட்டது. என்னை பொறுத்தவரை இந்த படம் அதற்கு தேவையான காலகட்டத்தை எடுத்துக்கொண்டது. காலதாமதமானாலும் இப்படத்திற்கு என்ன தேவையோ அதை தேவைப்படும் நேரத்தில் சரியாக செய்துக் கொடுத்தார் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு. என்னுடைய சினிமா வாழ்க்கையில், இப்படம் ஒரு முக்கியமான படமாக இருக்கும்", என சூர்யா கூறினார்.