Don't Miss!
- Automobiles இன்டிகாவையே விற்பனையில் மிஞ்சிய டாடா பஞ்ச்! பலாபழத்தில் மொய்க்கும் ஈக்களைவிட மோசமாக மக்கள் மொய்க்குறாங்க!
- News இதுதான் நம்ம தமிழ்நாடு.. மூக்கு மேல் விரல் வைத்த ஈரோடு.. புது டிரஸ்ஸில்.. யாரிந்த 3 பெண்கள்.. சபாஷ்
- Lifestyle Today Rasi Palan 20 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் பண விஷயத்தில் யோசித்து முடிவெடுப்பது நல்லது...
- Sports CSK vs LSG : தோனி பேட்டிங்.. அலறிய வாட்ச்.. பதறிய டி காக் மனைவி.. ரசிகர்கள் செயலால் நடந்த சம்பவம்
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்க ரசிகர்களுக்கு ரஜினி தடை போட்டது ஏன்?
சென்னை: தொலைக்காட்சிகளில் இடம்பெறும் விவாதங்களில் பங்கேற்க ரசிகர்ள் மற்றும் நிர்வாகிகளுக்கு தடை விதித்துள்ளது ரஜினிகாந்த் ரசிகர் மன்றம்.
கட்சி அறிவிக்கப்பட்டு முறையான அறிவிப்பு வெளியாகும்வரை யாரும் இதுபோன்ற விவாதங்களில் பங்கேற்று, ரஜினி சார்பில் பேச வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளார் ரசிகர் மன்ற நிர்வாகி விஎம் சுதாகர்.
இதுகுறித்து அவர் இன்று அவர் விரிவான அறிக்கையும் வெளியிட்டுள்ளார்.
ஏன் இந்தத் தடை?
உண்மையில் ரஜினிகாந்த் சார்பாகவோ, அவரது ரசிகர்கள் சார்பாகவோ இவர்தான் பேச வேண்டும் என யாரையும் ரஜினி மன்றம் அறிவிக்கவில்லை. நடிகர் ஜீவாவுக்கு மட்டும் அந்த அனுமதியை ரஜினியே கொடுத்திருந்தார்.
ஆனால் பின்னர் ரஜினி ஆதரவு என்ற பெயரில் பலரும் விவாதங்களில் பங்கேற்றுப் பேசினர். இதில் நிறைய முரண்பாடுகள் ஏற்பட்டன. ரஜினி சொல்லாத விஷயங்களை சொன்னதாகத் தெரிவித்தனர் அல்லது பயிற்சியின்மையால் தடுமாறினர்.
இதைக் கருத்தில் கொண்டே ரசிகர்கள் அல்லது நிர்வாகிகள் யாரும் விவாதங்களில் பங்கேற்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனால் விரைவில் இதற்கென தனி பேச்சாளர் குழுவே அறிவிக்கப்படும் எனத் தெரிகிறது. தலைமை மன்ற பேச்சாளர்கள் என அறிவிக்கப்படும் நபர்கள் மட்டுமே இனி இத்தகைய விவாதங்களில் பங்கேற்க முடியும்.