ஆண்கள் தினம் இல்லாதபோது நாம் ஏன் மகளிர் தினத்தை கொண்டாடணும்?: வரலட்சுமி
சென்னை: ஆண்கள் தினம் என்று ஒன்று இல்லாத நிலையில் நாம் ஏன் மகளிர் தினத்தை கொண்டாட வேண்டும் என்று கேள்வி எழுப்பியுள்ளார் வரலட்சுமி சரத்குமார்.
இன்று சர்வதேச மகளிர் தினம். மகளிர் தினத்தை முன்னிட்டு திரையுலக பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என்று பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
இந்நிலையில் நடிகை வரலட்சுமி சரத்குமாரின் வாழ்த்து சற்று வித்தியாசமாக உள்ளது.
மகளிர் தினம்
ஆண்கள் தினம் என்று ஒன்று இல்லாத நிலையில் நாம் ஏன் மகளிர் தினத்தை கொண்டாட வேண்டும்.? ஒவ்வொரு நாளும் மகளிர் தினம் தான்...தினமும் உங்களை கொண்டாடுங்கள்..உங்கள் மீது நம்பிக்கை வையுங்கள்..ஆண்டின் ஒரு நாள் அல்ல மாறாக தினமும் மரியாதை கிடைப்பது தான் உண்மையான சமத்துவம் என்று ட்வீட் செய்துள்ளார் வரலட்சுமி சரத்குமார்.

மகிழ்ச்சி
அது என்ன மகளிர் தினம், எங்களுக்கு ஆண்கள் தினம் என்று இல்லையே என ஆண்கள் பல ஆண்டுகளாக கேட்டுக் கொண்டிருக்கும் நேரத்தில் வரலட்சுமி இப்படி கேள்வி எழுப்பியுள்ளார்.
ஆயுஷ்மான் குரானா
சீனாவில் பிரசவ வலியை ஆண்கள் தெரிந்து கொள்ளும் வகையில் ஒரு சாதனம் உள்ளது. அது குறித்த வீடியோவை வெளியிட்டு மகளிர் தின வாழ்த்து தெரிவித்துள்ளார் பாலிவுட் நடிகர் ஆயுஷ்மான் குரானா. அந்த டெலிவரி பார் இந்தியாவுக்கும் வர வேண்டும்.
பெண்கள்
இது தான் உண்மை. மகளிர் தின வாழ்த்துக்கள் வேண்டாம், தினமும் மதித்தால் அதுவே போதும்.


Click it and Unblock the Notifications











