Don't Miss!
- News வேணாம்.. தப்பாக போயிரும்..! வாக்குச் சாவடியில் முதல்வர் ஸ்டாலின் செய்த செயல்.. அதிசயித்த மக்கள்..!
- Lifestyle எப்பவும் ஒரே மாதிரி சட்னி செய்யாம.. ஒருமுறை தீயில் சுட்ட தக்காளி சட்னியை செய்யுங்க.. டேஸ்ட் சும்மா அள்ளும்..
- Sports ரூ.14 கோடி வீரருக்கு ஆப்பு.. லக்னோ பிட்சால் சிஎஸ்கே அணியில் நடக்கப்போகும் மாற்றம்.. ருதுராஜ் முடிவு!
- Technology ரூ.10,000 குள்ள 2.. ரூ.20,000 குள்ள 2.. Redmi-யின் 5 முரட்டு போன்கள் மீது.. வெயிட்டா ரூ.2000 டிஸ்கவுண்ட்!
- Automobiles உலகம் முழுவதும் ராயல் என்ஃபீல்டு பைக்கை வாடகைக்கு எடுக்கலாம்! எப்படி தெரியுமா?
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
விஸ்வரூபத்துக்கு தடை வருமா...?- ஜனவரி 8ம் தேதி வழக்கு தள்ளி வைப்பு!
சென்னை ஐகோர்ட்டில் ரீஜெண்ட் சாய்மிரா எண்டர்டைன்மெண்ட் என்ற நிறுவனம் சார்பில் ராஜேந்திர ஜெயின் என்பவர் வழக்கு தொடர்ந்துள்ளார். அதில், "மர்மயோகி என்ற திரைப்படத்தை தயாரிக்க சந்திரஹாசன், கமல்ஹாசன் ஆகியோருடன் 2008 ம் ஆண்டு ஒப்பந்தம் செய்து கொண்டோம். ஆனால் படம் தொடங்கப்படவில்லை. இதனால் எங்கள் நிறுவனத்துக்கு ரூ.10 கோடியே 50 லட்சம் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. தற்போது ராஜ்கமல் நிறுவனம் தயாரிப்பில் கமல்ஹாசன் நடித்துள்ள விஸ்வரூபம் திரைப்படம் வெளியாக உள்ளது. மர்மயோகி படத்துக்காக வாங்கிய தொகையை ராஜ்கமல் நிறுவனம் திருப்பித் தராத வரை, விஸ்வரூபம் படத்தை வெளியிட அனுமதிக்கக்கூடாது," என்று கோரியிருந்தார்.
இந்த வழக்கை நீதிபதி வினோத்குமார் சர்மா விசாரிக்கிறார். ராஜ்கமல் நிறுவனம் சார்பில் பதில்மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், "இது பொய் வழக்கு. இதுபோன்ற மனு ஒன்றை பிரமிட் சாய்மீரா என்ற பெயரில் தாக்கல் செய்து, ரூ.10 கோடி கேட்டுள்ளனர். அந்த வழக்கில் அந்த தொகைக்கான உத்தரவாதத்தை அளித்திருக்கிறோம். அந்த வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் தொடரப்பட்டுள்ள மற்றொரு வழக்கை ஏற்க முடியாது.
விஸ்வரூபம் படத்தை தமிழ் மற்றும் இந்தியில் ரூ.90 கோடி செலவில் தயாரித்து 10 -ந்தேதி டி.டி.எச். முறையிலும், 11 -ந்தேதி திரையரங்குகளிலும் வெளியிட உள்ளோம். இப்போது இதற்கு தடை விதித்தால் பெருத்த நஷ்டத்துக்கு உள்ளாவோம். எனவே விஸ்வரூபத்துக்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்," என்று கூறியுள்ளனர்.
இந்த வழக்கின் விசாரணையை 8-ந்தேதிக்கு தள்ளிவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.
இந்த வழக்குகளால் விஸ்வரூபம் படத்துக்கு தடை வருமா என்ற பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது.