Don't Miss!
- News நேருவும், இந்திராவும் முட்டாள்கள் இல்லை.. பாஜகவின் மொழி கொள்கைக்கு ஜேஎன்யு துணைவேந்தர் எதிர்ப்பு
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
- Automobiles ரோடு இல்லாத இடத்துக்கு கூட தைரியமா கொண்டு போகலாம்!! விலை மட்டும் கொஞ்சம் கம்மியா இருந்தால் எல்லாரும் வாங்கலாம்
- Lifestyle புடவை கட்டினால் புற்றுநோய் வருகிறதாம்.. ஆய்வுகள் கூறும் அதிர்ச்சி தகவல்..!
- Travel மதுரை கள்ளழகர் திருவிழாவைப் போன்றே மற்ற இடங்களில் நடக்கும் ‘அழகர் திருவிழாக்கள்’ பற்றி தெரியுமா உங்களுக்கு?
- Finance டெக் மஹிந்திரா முன்னாள் சிஇஓ சிபி.குர்னானி துவங்கிய புது கம்பெனி.. வியந்துபோன ஐடி ஊழியர்கள்..!
- Technology முடிச்சிட்டாரு முகேஷ் அம்பானி.. மாதம் ரூ.112 போதும்.. 336 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் கால்.. ஓடிடி சந்தா!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
மணிரத்னம் வீட்டின் முன்பு தற்கொலை செய்வேன்: 'குரு' பட லைட்மேன்
சென்னை: இயக்குனர் மணிரத்னத்தின் வீட்டின் முன்பு தற்கொலை செய்வேன் என லைட்மேன் மணிமாறன் தெரிவித்துள்ளார்.
அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராய் உள்ளிட்டோரை வைத்து மணிரத்னம் இயக்கிய படம் குரு. அந்த படத்தில் லைட்மேனாக வேலை செய்தவர் மணிமாறன்.
குரு படத்தில் வேலை செய்தபோது ரத்தம் தொடர்பான தொற்று ஏற்பட்டு அவதிப்பட்டுள்ளார் மணிமாறன். மருத்துவ செலவுக்கு பணம் கேட்டும் லைட்மேன்கள் சங்கத்திடம் இருந்தோ, மணிரத்னம் குழுவிடம் இருந்தோ பதிலே இல்லையாம்.
இது தொடர்பாக அவர் லைட்மேன்கள் சங்கத்தை எதிர்த்து நீதிமன்றம் சென்று அவருக்கு சாதகமாக தீர்ப்பு வந்தும் பயனில்லை. கடந்த 10 ஆண்டுகளாக அவரது குடும்பத்தார் தான் மருத்துவ செலவுகளை கவனித்து வருகிறார்கள்.
இந்நிலையில் குரு படத்தில் வேலை பார்த்தபோது தனக்கு ஏற்பட்ட மருத்துவ செலவுக்கான பணத்தை அளிக்காவிட்டால் மணிரத்னம் வீட்டின் முன்பு தற்கொலை செய்யப் போவதாக மணிமாறன் தெரிவித்துள்ளார்.
மணிமாறனின் அறிவிப்பால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.