Don't Miss!
- News
இந்து மக்கள் கட்சியின் "சனாதன எழுச்சி பேரணி".. அனுமதிக்க முடியாது.. உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு
- Lifestyle
இந்த சூப்பர் உணவுகள் தாமதமான உங்கள் மாதவிடாயை சில மணி நேரங்களில் வரவைக்குமாம்...!
- Technology
யூஸ் பண்றீங்களோ இல்லயோ.. உங்க லேப்டாப்பில் இந்த வெப் ப்ரவுஸர் இருக்கா? அப்போ அலெர்ட் ஆகிக்கோங்க!
- Sports
"அந்த ஒரு விஷயம்.. உலகில் சூர்யகுமாரிடம் மட்டுமே உள்ள திறமை.. ரிக்கிப் பாண்டிங் புகழாரம் - விவரம்
- Automobiles
டாடாவை கதையை முடிக்க பிளான்... ரயிலைபோல் அடுத்தடுத்து ஆறு எலெக்ட்ரிக் கார்களை களமிறக்கு போகிறது மாருதி சுஸுகி!
- Finance
2 நாளில் 12 லட்சம் கோடி ரூபாய் அவுட்.. சென்செக்ஸ் 800 புள்ளிகளுக்கு மேல் சரிவில் முடிவு..!
- Travel
சூரிய சுற்றுலாவா? இது என்ன புதிய சுற்றுலாவா இருக்கே – இதை பார்க்க எங்கு செல்வது?
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
'நோட்டா'வை எதிர்க்க முடியாத அளவுக்கு அரசியல்வாதிகளுக்கு 'செக்' வைத்த விஜய்
சென்னை: விஜய் தேவரகொண்டா சொல்வதை பார்த்தால் அரசியல் கட்சியினர் நோட்டா படத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்க மாட்டார்களோ?
தெலுங்கு நடிகரான விஜய் தேவரகொண்டா நோட்டா படம் மூலம் தமிழில் அறிமுகமாகியுள்ளார். வரும் 5ம் தேதி நோட்டா படம் ரிலீஸாகிறது. தலைப்பை பார்த்தாலே இது அரசியல் சார்ந்த படம் என்பது அனைவருக்கும் புரியும்.
படத்தில் வைக்கப்பட்டுள்ள சில காட்சிகள் குறித்து விஜய் தெரிவித்துள்ளார்.

கும்பிடு
தலைவர் புகைப்படத்தை அக்கட்சியினர் தங்களின் சட்டைப் பாக்கெட்டில் வைத்திருப்பதை படத்தில் காண்பித்துள்ளனர். அது ஒரு பெரிய விஷயம் இல்லை. ஆனால் தலைவரை பார்த்ததும் கும்பிடு போடும் கட்சியினரை பார்த்து நாசர் நிமிர்ந்து என் முகத்தை பாருங்கய்யா, இல்லை என்றால் எனக்கு சிலை செய்தால் என் முகத்திற்கு பதில் வேறு யார் முகத்தையாவது வைத்துவிடுவீர்கள் என்று கூறும் காட்சி உள்ளது.

யாருக்கு?
தமிழகத்தில் யாரை பார்த்தால் கட்சியினர் இந்த அளவுக்கு குனிந்து கும்பிடுவார்கள் என்பது அனைவருக்கும் தெரியும். அப்படி கும்பிடு போட்டவர்கள் சிலை வைத்தது ஒருவருக்கு ஆனால் அதன் முகம் வேறு ஒருவர் போன்று இருந்த கொடுமை இங்கு நடந்துள்ளது. இதை தான் கிண்டல் செய்து படத்தில் காட்சி வைத்துள்ளனர்.

விஜய்
படத்தில் வரும் காட்சிகளை பார்த்தால் தவறு செய்தவர்களுக்கு மட்டுமே உறுத்தும். மற்ற அரசியல்வாதிகள் பொது மக்களுடன் சேர்ந்து ரசிக்கும்படி இருக்கும் என்று விஜய் தேவரகொண்டா தெரிவித்துள்ளார். அப்படி என்றால் நோட்டா படத்திற்கு பெரிய அளவில் எதிர்ப்பு தெரிவித்து இலவச விளம்பரம் கொடுக்க மாட்டார்களா?

தவறு
நோட்டா படத்தை எதிர்த்து பேட்டி கொடுத்தால் விஜய் தேவரகொண்டா கூறியது உண்மையாகிவிடும். தவறு செய்ததை தாமாக வந்து ஒப்புக் கொண்டது போன்றாகிவிடும். அதனால் படம் வந்தாலும் அப்படியொரு படம் வரவில்லை என்று நினைத்துக் கொள்வார்களா?. பொறுத்திருந்து பார்ப்போம்.