Don't Miss!
- News வேணாம்.. தப்பாக போயிரும்..! வாக்குச் சாவடியில் முதல்வர் ஸ்டாலின் செய்த செயல்.. அதிசயித்த மக்கள்..!
- Lifestyle எப்பவும் ஒரே மாதிரி சட்னி செய்யாம.. ஒருமுறை தீயில் சுட்ட தக்காளி சட்னியை செய்யுங்க.. டேஸ்ட் சும்மா அள்ளும்..
- Sports ரூ.14 கோடி வீரருக்கு ஆப்பு.. லக்னோ பிட்சால் சிஎஸ்கே அணியில் நடக்கப்போகும் மாற்றம்.. ருதுராஜ் முடிவு!
- Technology ரூ.10,000 குள்ள 2.. ரூ.20,000 குள்ள 2.. Redmi-யின் 5 முரட்டு போன்கள் மீது.. வெயிட்டா ரூ.2000 டிஸ்கவுண்ட்!
- Automobiles உலகம் முழுவதும் ராயல் என்ஃபீல்டு பைக்கை வாடகைக்கு எடுக்கலாம்! எப்படி தெரியுமா?
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
பெண்கள் சக்திகள், ஆண்களுக்கு சற்றும் குறைந்தவர்கள் அல்ல.. அமிதாப்
அமிதாப் பச்சன் நடத்தி வரும் கோன் பனேகா குரோர்பதி நிகழ்ச்சியில் ஒரு பெண் ரூ. 5 கோடி பரிசுத் தொகையைத் தட்டிச் சென்றுள்ளார். அப்போதுதான் இந்த வார்த்தையைக் கூறினார் அமிதாப் பச்சன். அப்பெண்ணின் பெயர் சுமீத் கெளர் ஷானி. இல்லத்தரசியான இவர் கோன் பனேகா குரோர்பதி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரூ. 5 கோடி பரிசுத் தொகையைத் தட்டிச் சென்று அசத்தியுள்ளார்.
சுமீத்தைப் பாராட்டி அமிதாப் பச்சன் பேசுகையி்ல, இளம்பெண்களை மானபங்கப்படுத்துவது, கேலி செய்வது, அவமானப்படுத்துவது ஆகிய காலமெல்லாம் இனி மலையேறி விடும். ஆண்கள் நிறைந்த இந்த உலகில், ஒரு பெண் சாதனை படைத்திருப்பதைப் பார்த்து நான் நிறைய மகிழ்ச்சி அடைகிறேன். மிக மிக சந்தோஷமாக இருக்கிறது.
ஆண்களுடன் போட்டியிட்டு சுமீத் கெளர் செய்துள்ள இந்த சாதனை மிகப் பெரியது. பெண்கள் பொதுவாக சக்தி போன்றவர்கள். ஆண்களுக்கு நிகரானவர்கள். ஏன் ஆண்களை விட வலிமையானவர்கள். ஆண்களுக்கு சற்றும் குறைந்தவர்கள் இல்லை.
வாய்ப்பு கிடைத்தால் எந்தப் பெண்ணும் சாதிப்பார் என்பதற்கு சுமீத் கெளர் ஒரு நல்ல உதாரணம். நாடே இன்றுபாலியல் குற்றங்களால் தலை கவிழ்ந்து நிற்கும்போது சுமீத் கெளரின் சாதனை தலைநிமிர வைப்பதாக உள்ளது என்றார் பச்சன்.