Don't Miss!
- Sports டி20 உலக கோப்பை- சஞ்சு சாம்சனுக்கு தொடரும் அநீதி.. இந்திய அணியில் ஒரு இடத்திற்கு 3 பவுலர்கள் போட்டி
- News தமிழகத்தில் உச்சம் தொடும் கோடை வெப்பம்.. திடீரென முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை.. என்ன மேட்டர்
- Lifestyle இந்த பட்டனை அழுத்தினால் கார் உடனடியாக கூலிங் ஆகிடும்... இது பலருக்கும் தெரியாத விஷயம்..!
- Automobiles 5 வருஷத்துக்கு எந்தவொரு பிரச்சனையும் இல்லாமல் ஓட்டலாம்!! வாரண்டியை வாரி வழங்கும் இவி நிறுவனம்!
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
பாட்டெழுதுவது என் வேலையில்லை: இயக்குநர் சீனு ராமசாமி
சன் டிவியின் சூரிய வணக்கம் விருந்தினர் பக்கத்தில் பங்கேற்றுப் பேசிய இயக்குநர் சீனு ராமசாமி, தன்னுடைய நீர்பறவை திரைப்படம் பற்றியும், கவிதை, இலக்கியம், நட்பு வட்டம் குறித்தும் பகிர்ந்து கொண்டார்.
தன்னுடைய முதல் படமான தென்மேற்குப் பருவக்காற்று திரைப்படம் வெளியானபோது தான் பரபரப்பாக இருந்ததாகவும், தன்னைச் சுற்றியிருந்தவர்கள் அமைதியாக இருந்ததாக கூறினார். ஆனால் நீர்பறவை படம் வெளியானபோது நான் அமைதியாக இருந்தேன். என்னைச்சுற்றியிருந்தவர்கள் பரபரப்பாக இருந்தனர் என்றார்.
நீர்பறவை படம் பற்றி அதிகம் பகிர்ந்து கொண்ட சீனு ராமசாமி படத்தில் நடித்த சரண்யா பொன்வண்ணன், நந்திதாதாஸ், சமுத்திரகனி உள்ளிட்ட பலருக்கும் நன்றி தெரிவித்தார். மணிரத்னம் இயக்கும் கடல் படத்திற்கும் நீர்பறவை படத்திற்கும் உள்ள ஒன்றுமை குறித்து கேள்வி எழுந்த போது அவர் கப்பலில் போய் மீன் பிடிக்கப் போயிருக்கிறார். நான் நாட்டுப்படகில் மீன் பிடித்துக்கொண்டு வந்திருக்கிறேன் என்று அடக்கமாக கூறினார் சீனு ராமசாமி.
பரபரப்பான இயக்குநராக இருந்தாலும் கவிதைத் தொகுப்புகளை வெளியிடுகிறார். நல்ல கவிஞரான நீங்கள் ஏன் உங்கள் படங்களுக்கு பாடல்களை எழுதுவதில்லை என்று கேட்டனர் தொகுப்பாளர்கள். அதற்கு பதிலளித்த சீனு ராமசாமி, நான் டைரி எழுதுவது போலத்தான் கவிதை எழுதுகிறேன். அதற்காக பாட்டெல்லாம் எழுத முடியாது. எனக்கு எழுதவும் தெரியாது. நான் இயக்குநர் வேலையை சிறப்பாக செய்தால் போதும். பாடல்கள் எழுதுவதற்கு என்று சிறப்பான கவிஞர்கள், பாடலாசிரியர்கள் இருக்கின்றனர் என்றார். இனி தன்னுடைய அடுத்ததாக எழுத்தாளர் எஸ். ராமகிருஸ்ணன், எழுத்தாளர் ஜெயமோகன் கதைகளை படமாக்கப்போவதாகவும் கூறினார் சீனு ராமசாமி.