Don't Miss!
- Technology அள்ளி கொடுக்கும் Jio.. ப்ரீபெய்ட் திட்டங்களில் எக்ஸ்ட்ரா டேட்டா.. OTT.. வாய்ஸ் கால்கள்.. விட்றாதீங்க..
- News வேணாம்.. தப்பாக போயிரும்..! வாக்குச் சாவடியில் முதல்வர் ஸ்டாலின் செய்த செயல்.. அதிசயித்த மக்கள்..!
- Lifestyle எப்பவும் ஒரே மாதிரி சட்னி செய்யாம.. ஒருமுறை தீயில் சுட்ட தக்காளி சட்னியை செய்யுங்க.. டேஸ்ட் சும்மா அள்ளும்..
- Sports ரூ.14 கோடி வீரருக்கு ஆப்பு.. லக்னோ பிட்சால் சிஎஸ்கே அணியில் நடக்கப்போகும் மாற்றம்.. ருதுராஜ் முடிவு!
- Automobiles உலகம் முழுவதும் ராயல் என்ஃபீல்டு பைக்கை வாடகைக்கு எடுக்கலாம்! எப்படி தெரியுமா?
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
'என்னை அறிந்தால்' ரிலீஸ் தள்ளிப் போனது ஏன்? தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம் விளக்கம்
சென்னை: கவுதம் மேனன் இயக்கத்தில் 'அல்டிமேட் ஸ்டார்' அஜித் நடித்துள்ள, 'என்னை அறிந்தால்' திரைப்படம் பொங்கலுக்கு திரைக்கு வராமல் தள்ளிப்போனதன் பின்னணியில் பின்னணி இசை சேர்ப்பு, மிக்சிங் போன்ற பணிகள் பாக்கியுள்ளதுதான் காரணம் என்றும் படத்தின் தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம் விளக்கம் அளித்துள்ளார். பட வெளியீடு தள்ளிப்போனது குறித்து, பல்வேறு யூகங்கள் நிலவிய நிலையில் ரத்னம் வெளியிட்டுள்ள அறிவிப்பு முக்கியத்துவம் பெறுகிறது.
சபாஷ் சரியான போட்டி..
'என்னை அறிந்தால்' திரைப்படம், பொங்கலுக்கு வெளியாகும். ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள 'ஐ' திரைப்படத்திற்கும், 'என்னை அறிந்தாலுக்கும்' இடையே கடும் போட்டியிருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
'ஐ' படத்திற்கு அரைகூவல்
'ஒருபோதும் வந்து மோதமாட்டாய் என்னை அறிந்தால். மோதிப்பார்க்க ஆசைப்பட்டால் 'ஐ'யோ தொலைந்தாய்..' என்ற பாடல் வரி, 'என்னை அறிந்தால்' திரைப்படத்தில் இடம் பெற்றுள்ளது. எனவே இது 'ஐ' படத்திற்கான எச்சரிக்கை பாடல் என்றே பல அஜித் ரசிகர்களும் நினைத்துக் கொண்டனர்.
'தல' பொங்கல்..
அதேபோல, 'என்னை அறிந்தால்' படம் பொங்கலுக்கு ரிலீசாகும் என்றே பத்திரிகையில் விளம்பரம் தரப்பட்டும் வந்தது. இதனால், அஜித் ரசிகர்கள், தங்களுக்கு இது 'தல' பொங்கலாக அமையப்போகிறது என்று மகிழ்ச்சியில் ஆரவாரம் செய்து வந்தனர். ஆனால், திடீரென கடந்த வாரம் ஏ.எம்.ரத்னம் ஒரு அறிவிப்பை வெளியிட்டார். அதாவது, 'என்னை அறிந்தால்', பொங்கலுக்கு ரிலீசாகாது, ஜனவரி 29ம்தேதி திரைக்கு வர உள்ளது என்று ரத்னம் தெரிவித்தார்.
பல யூகங்கள்
'ஐ' திரைப்படம் பிரமாண்டமாக எடுக்கப்பட்டதுடன், வெற்றி இயக்குநர் ஷங்கரின் கைவண்ணத்தில் உருவானது என்பதால், தனது படத்தை பொங்கலுக்கு வெளியிட ஏ.எம்.ரத்னம் பயந்துவிட்டார் என்றும், 'ஐ' படத்திற்கு அதிக தியேட்டர்களை ஒதுக்கிய தியேட்டர் அதிபர்கள், 'என்னை அறிந்தாலுக்கு' குறைவான தியேட்டரை ஒதுக்கியதால்தான் பட வெளியீடு தள்ளிப்போய்விட்டது என்றும் பல்வேறு செவி வழி செய்திகள் உலா வந்தன. இதனால் அஜித் ரசிகர்கள், தயாரிப்பாளர் தரப்பு மீது கடும் கோபத்தில் இருந்தனர்.
வேலை பாக்கி இருக்குப்பா..
இந்நிலையில் ஏ.எம்.ரத்னம் ஒரு விளக்கம் வெளியிட்டுள்ளார். அதில் கூறியுள்ளதாவது: 'என்னை அறிந்தால்' படத்தின் பின்னணி இசை சேர்ப்பு, மிக்சிங் போன்ற பணிகள் நிறைவடையவில்லை. பட வேலைகளை அவசரம் அவசரமாக முடித்து வெளியிட விரும்பவில்லை. எல்லா வேலைகளையும் நிதானமாக முடித்து, படத்தை 2 வாரங்கள் தள்ளி திரைக்கு கொண்டுவர முடிவு செய்யப்பட்டது. அதன்படி, படத்தின் வெளியீடு 29ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டு இருக்கிறது. இவ்வாறு ரத்னம் தெரிவித்துள்ளார்.
-
அட அதுக்குள்ள லீக் ஆகிடுச்சே.. சியான் 62 பட டைட்டில் இதுதானா?.. ஆனால், அந்த வாடை வருதே!
-
விர்ஜினிட்டியை எப்போ இழந்த?.. மகனை பார்த்து கேட்குற கேள்வியா இது மலைகா அரோரா.. தீயாக பரவும் வீடியோ!
-
இருட்டு அறைக்கு அழைத்தார்.. ஆண் நடிகர்களுக்கும் அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனை இருக்கு.. பாலிவுட் நடிகர் வேதனை!